TN TRB தேர்வர்கள் கவனத்திற்கு – விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் அறிவிக்கப்பட்ட ஆசிரியர் தகுதி தேர்வுக்கு (TRB) விண்ணப்பிக்க விரும்புபவர்கள், இன்று (ஏப்ரல்.26) கடைசி நாள் என்பதால் தங்களது விண்ணப்பங்களை விரைந்து மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.
TRB தேர்வு
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் ஆசிரியராக பணியாற்ற விரும்புபவர்கள் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் தேர்வுகளில் தேர்ச்சி பெற வேண்டியது அவசியம் ஆகும். அந்த வகையில் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்காக பல்வேறு போட்டித்தேர்வுகளை நடத்தி வருகிறது. இந்த தகுதித் தேர்வை டிப்ளமோ ஆசிரியர் பயிற்சி மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் பட்டம் பெற்றவர்கள் எழுதலாம்.
சென்னை: இன்று சவரனுக்கு ரூ.512 குறைந்த ஆபரணத் தங்கத்தின் விலை – நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி!
வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் 2 முறை நடத்தப்படும் இத்தேர்வுகள் கடந்த 2 ஆண்டுகளாக நிலவி வரும் கொரோனா பரவலால் தடைபட்டது. இருப்பினும் இந்த ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வுகளை நடத்த முடிவு செய்த வாரியம் அதற்கான அறிவிப்புகளை கடந்த மார்ச் 7ம் தேதி வெளியிட்டது. இதற்கான விண்ணப்ப பதிவு செயல்முறைகள் மார்ச் 14ல் துவங்கி ஏப்ரல் 13ம் தேதி வரை நடைபெற்றது. இந்த குறிப்பிட்ட காலங்களில் இணையதள சர்வர் பிரச்சனையால் பலர் விண்ணப்பங்களை செலுத்த முடியாமல் சிரமப்பட்டதாக புகார்கள் எழுந்தது.
Exams Daily Mobile App Download
இதனை சரிசெய்யும் பொருட்டு ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு ஏப்ரல் 18 முதல் மீண்டும் விண்ணப்ப பதிவுகள் துவங்கியது. அந்த வகையில் 2ம் கட்ட விண்ணப்ப பதிவுகளை செலுத்துவதற்கான கடைசி தேதி இன்றுடன் (ஏப்ரல்.26) முடிவடைகிறது. எனவே, இதுவரை ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பிக்காதவர்கள் தங்களது விண்ணப்பங்களை விரைந்து செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். இதற்கிடையில் TRB தேர்வுக்கு மட்டும் இதுவரை மொத்தமாக ஐந்து லட்சம் பேர் விண்ணப்பித்திருப்பதாக தகவல்கள் பெறப்பட்டுள்ளது.