ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு – ஆதார் எண்ணை இணைக்க கால அவகாசம் நீட்டிப்பு!
இந்தியாவில் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தின் கீழ் ரேஷன் அட்டைதாரர்கள் பயன் பெற ரேஷன் கார்டு விவரங்களை அப்டேட் செய்ய வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கு வழங்கப்பட்ட காலக்கெடு ஜூன் 30 2022 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
ரேஷன் கார்டு:
இந்தியாவில் ரேஷன் கார்டுகள் மூலம் ரேஷன் கடைகளில் மலிவு விலையில் மளிகை மற்றும் வீட்டு உபயோக பொருட்களை அரசு வழங்கி வருகிறது. கடந்த ஊரடங்கு மாதங்களில் அனைத்து மாநில அரசுகளும் ரேஷன் கடைகள் மூலம் நிவாரணங்களை பெற்று மக்கள் பயனடைந்தனர். இந்த குடும்ப அட்டை தரநிலை குடும்ப தலைவரின் வருமானத்தை பொறுத்து 5 வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதல் சலுகையாக இந்தியா முழுவதும் வேலைக்காக இடம்பெயரும் தொழிலாளர்களுக்கு உதவும் வகையில் இந்தியாவில் ஒரே நாடு – ஒரே ரேஷன் கார்டு திட்டம் கொண்டுவரப்பட்டது.
தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 11ம் தேதி உள்ளூர் விடுமுறை – மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!
இதன் மூலம் ஏராளமான பிற மாநிலங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் பயனடைந்து வருகின்றனர். இந்த ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தின் கீழ் பயன்பெற ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும். ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்துடன் உங்கள் ரேஷன் கார்டு மற்றும் ஆதார் கார்டை இணைப்பதற்கு வழங்கப்பட்ட காலக்கெடு முடிவடையுள்ள நிலையில் தற்போது மேலும் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி காலக்கெடு ஜூன் 30 2022 வரை வழங்கப்பட்டுள்ளது.
தற்போது ஆதார், பான், வாக்காளர் அடையாள அட்டை போன்றே தற்போது ரேஷன் கார்டும் முக்கிய ஆவணங்களில் ஒன்றாக உள்ளது. இத்தகைய ஆவணத்தை நாம் எப்போதும் அப்டேட்டாக வைத்திருப்பது அவசியமாகும். அப்போது தான் அரசின் நலத்திட்டங்களை எவ்வித சிக்கலும் இன்றி நாம் பெற முடியும். எளிதாக வீட்டில் இருந்தபடியே அந்தந்த மாநில உணவு வழங்கல் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விவரங்களை அப்டேட் செய்யலாம்.