தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 11ம் தேதி உள்ளூர் விடுமுறை – மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!
தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது கோவில்களில் வழக்கம் போல கோவில் திருவிழாக்கள் வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. இதையடுத்து புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோயில் தேரோட்ட விழா வருகிற 11ம் தேதி நடைபெற உள்ளது. அதனால் இவ்விழாவை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
உள்ளூர் விடுமுறை
தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று பரவலின் தாக்கம் குறைந்ததை தொடர்ந்து படிப்படியாக தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. இதில் குறிப்பாக இந்த ஆண்டு அனைத்து வழிபாட்டுத் தலங்களும் வழக்கம் போல திறக்கப்பட்டுள்ளன. அத்துடன் அனைத்து கோயில்களிலும் திருவிழாக்கள் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி பல்வேறு கோவில்களில் திருவிழாக்கள் வெகு விமர்சையாக நடைபெற்று கொண்டிருக்கிறது. இவ்விழாவில் பக்தர்கள் கலந்து கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இப்போது அனைத்தும் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளன.
சென்னையில் நாளை (ஏப்.4) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவில் தேரோட்ட விழா ஆண்டுதோறும் வெகு விமர்சையாக நடைபெறும். இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக தேரோட்ட திருவிழா நடைபெறாமல் நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது நாடு முழுவதும் கொரோனா பரவல் குறைந்துள்ளது. அதன்படி புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோயில் இந்த ஆண்டு தேரோட்ட விழா வருகிற ஏப்ரல் 11ம் தேதி அன்று நடைபெற உள்ளது.
அதனால் இவ்விழாவை பொதுமக்கள் அனைவரும் கண்டுகளிக்கும் விதமாக மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த அறிவிப்பில், வருகிற 11ம் தேதி அன்று தேரோட்ட திருவிழா நடைபெற உள்ளதால் மாவட்ட முழுவதும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால் புதுக்கோட்டை மாவட்ட பொதுமக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். இந்த விடுமுறை தினத்தை ஈடு செய்யும் விதமாக மற்றொரு விடுமுறை நாளில் வேலை நாளாக செயல்படுத்தப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.