செய்த தவறால் சிறையில் அடைக்கப்படும் கோபி, பதறும் பாக்கியா? – ‘பாக்கியலட்சுமி’ சீரியல் திருப்பங்கள்!
விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் தான் ரேட்டிங்கில் தற்போது முன்னணியில் இருந்து வருகிறது. இனி வரும் நாட்களில் ரசிகர்கள் எதிர்பார்த்தது போன்ற காட்சிகள் வர உள்ளதால் மேலும் அதிக ரேட்டிங் புள்ளிகளை இந்த சீரியல் பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிறையில் கோபி:
பாக்கியாவின் கணவர் கோபி தற்போது வரை பாக்கியா மற்றும் ராதிகா இருவருக்குமே நேர்மையாக இல்லாமல் பல மோசடி வேலைகளை செய்து வருகிறார். தன் காதலி தன்னை நம்ப வேண்டும் என்றும், தன்னை பாவமாக நினைக்க வேண்டும் என்றும் தன் மனைவி மற்றும் வீட்டில் உள்ளவர்களை பற்றி மிகவும் தவறாக ராதிகாவிடம் சொல்லி இருக்கிறார். இதை உண்மை என்று நம்பி தான் கோபியை ராதிகா திருமணம் செய்து கொள்ள சம்மதித்திருக்கிறார். ஆனால் கோபியின் மனைவி பாக்கியா தான் என்ற உண்மை ராதிகாவிற்கு எப்போது தெரியவரும் என்று ரசிகர்கள் ஆர்வமுடன் எதிர்பார்த்து இருக்கின்றனர்.
இயற்கையாகவே கர்ப்பமாகும் முல்லை – இன்ப அதிர்ச்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர்!
ஏனென்றால் பாக்கியா மீது ராதிகா மிகவும் மரியாதை வைத்திருக்கிறார். இதனால் அதன்பிறகு ராதிகாவின் முடிவு என்னவாக இருக்கும் என்று ஆர்வம் அதிகரித்து இருக்கின்றது. இந்நிலையில், கோபியின் செயல்கள் நாளுக்கு நாள் எல்லை மீறி போய்க் கொண்டிருக்கிறது. அலுவலக வேலை அதிகம் என்று கூறி ராதிகா வீட்டிலேயே அதிக நேரத்தை கோபி செலவிடுகிறார். இதனால் அலுவலக வேலைகளை கவனிக்க தவருகிறார். இந்நிலையில் கோபி தனது பணத்தை மோசடி செய்து விட்டதாக கோபியின் அலுவலக கிளையண்ட் ஒருவர் போலீசில் புகார் அளிக்கிறார்.
இதனால் கோபியை கைது செய்து சிறையில் அடைகின்றனர். அதன்பிறகு பாக்கியாவிற்கு கால் செய்து விஷயத்தை கூறுகின்றனர். இதனால் பாக்கியா பதறிக் கொண்டு எழிலிற்கு கால் செய்து விஷயத்தை சொல்லவும், அவர் அங்கேயே கொஞ்ச நாள் இருக்கட்டும் விடுமா என்று சொல்கிறார். ஆனால் பாக்கியா கட்டாயப்படுத்துவதால் ஸ்டேஷனிற்கு சென்று பார்க்கின்றனர். அங்கு அழுது கொண்டு நிற்கும் பாக்கியாவை காட்டி இவங்களுக்கு தான நீங்க துரோகம் செய்றீங்க என்று எழில் அப்பாவிடம் கேட்கிறார். இதனால் கோபி குற்ற உணர்ச்சியில் தலை குனிந்து விடுவது போன்ற காட்சிகள் வர உள்ளது.