இயற்கையாகவே கர்ப்பமாகும் முல்லை – இன்ப அதிர்ச்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர்!
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது வழக்கத்தை விட கதை மிகவும் பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது. இதுவரை இல்லாத அளவிற்கு குடும்பத்தினர் மத்தியில் மனக்கசப்பு இருப்பது போல் காட்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில்,தற்போது குடும்பமே மீண்டும் மகிழ்ச்சி அடையும் அளவிற்கு ஒரு சம்பவம் நடக்க உள்ளது.
கர்ப்பமாகும் முல்லை:
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் சில மாதங்களாகவே சோகமாக கட்டப்படும் ஜோடியாக கதிர் முல்லை உள்ளனர். தனத்திற்கு அடுத்தபடியாக குடுமபத்தில் உள்ள அனைவரையும் மிகவும் அக்கறையோடு கவனிக்க கூடியவர் முல்லை. இதனால் வீட்டில் முல்லை என்றாலே தனி மரியாதை உண்டு. ஆனால் முல்லை தனக்கு குழந்தை பிறக்காமல் இருப்பதை பற்றி அதிகமாக கவலை பட்டு வந்த காரணத்தால் மருத்துவமனைக்கு சென்று சோதனை செய்தனர். சோதனையின் முடிவில் முல்லைக்கு இயற்கையாக குழந்தை பிறக்க வாய்ப்பில்லை என்று கூறிவிட்டனர்.
அரசியலில் குதித்த “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியல் தனம் சுஜிதா – வைரலாகும் வீடியோ!
இதை மிகவும் தாமதமாக அறிந்து கொண்ட முல்லை மனம் ஒடிந்து போய் கதிரை விட்டு பிரிய முடிவு செய்தார். ஆனால் கதிர் தனக்கு குழந்தையை விட நீ தான் முக்கியம் என்று வீட்டிற்கு அழைத்து வந்து சமாதானம் செய்கிறார். இது போன்ற காட்சிகளால் இடையில் ரேட்டிங் வரிசையில் பின்தங்கி இருந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மீண்டும் ரேட்டிங்கில் முன்னனியில் வரத் தொடங்கியுள்ளது. இதனால் இனி இதை பற்றிய காட்சிகள் தான் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் முல்லை பற்றிய பேச்சு தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் வீட்டில் அதிகம் ஓடிக் கொண்டிருக்கிறது. அனைவரும் சேர்ந்து முல்லையை சமாதானம் செய்து வருகின்றனர். குழந்தை பிறக்க வேண்டி சாமிக்கு பரிகாரம் செய்யலாம், மருத்துவமனையில் சென்று டிரீட்மெண்ட் எடுக்கலாம் என்று ஆளுக்கு ஒரு ஐடியா கொடுத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் யாருமே எதிர்பார்க்காத வண்ணம் முல்லை இயற்கையாகவே கர்ப்பமாகும் படியான காட்சிகள் தான் இனி வரும் நாட்களில் வர உள்ளது. இதனால் மொத்த பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பமும் இன்ப அதிர்ச்சி அடைய உள்ளனர்.