தமிழகத்தில் நிலம் இல்லா ஏழைகளுக்கு நிலம் அளிக்கும் திட்டம் – அரசாணை வெளியீடு!
தமிழகத்தில் நிலம் இல்லாதவர்களுக்கு நிலம் அளிக்கும் பிரதம மந்திரியின் திட்டத்தைச் செயல்படுத்த குழு அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
அரசாணை வெளியீடு:
நிலம் இல்லாதவர்களுக்கு நிலம் அளிக்கும் பிரதம மந்திரியின் திட்டத்தைச் செயல்படுத்துவதில் தாமதமான நடவடிக்கைகள் இருப்பதாக மத்திய அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை கடிதம் மூலம் குறிப்பிட்டிருந்தது. பிரதம மந்திரியின் திட்டத்தின் படி, நிலம் இல்லாதவர்களுக்கு நிலம் அளிக்க முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்தும் வகையில் தனிக்குழுவை அமைக்க வேண்டும் எனவும் அடுத்த இரண்டு மாதங்களுக்குள் நிலங்களை வழங்க வேண்டும் எனவும் மத்திய அரசு கேட்டுக் கொண்டிருந்தது.
தமிழகத்தில் 1முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு? முதல்வர் இன்று முக்கிய ஆலோசனை!
இதன் அடிப்படையில் நிலமற்ற விவசாயிகளுக்கு நிலம் அளிக்கும் பிரதம மந்திரி திட்டத்தை செயல்படுத்தும் விதமாக வருவாய் பேரிடர் மற்றும் மேலாண்மை துறை செயலாளர் தலைமையில் குழு அமைத்து ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை செயலாளர் கோபால் உத்தரவு பிறப்பித்துள்ளார். அடுத்த இரண்டு மாதத்தில் நிலமற்ற ஏழை மக்களை கண்டறிந்து அவர்களுக்கு நிலம் வழங்க கூடிய பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கு குடும்ப பென்சன் – முழு விபரம் இதோ!
இந்த குழுவின் துணைத் தலைவராக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை செயலாளரும், உறுப்பனராக நில நிர்வாக ஆணையரும், உறுப்பினர் மற்றும் ஒருங்கிணைப்பாளராக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை இயக்குநர் இருப்பார் என்றும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்காக தமிழக அரசு குழு அமைத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் நிலம் இல்லா ஏழைகள் பலர் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.