கேரள முதல்வர் பினராயி விஜயன் ராஜினாமா கடிதம் – ஆளுநரிடம் சமர்ப்பிப்பு!!
பினராயி விஜயன்:
கடந்த ஏப்ரல் 6ம் தேதி கேரளா உட்பட 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இதனை தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை மே 2ம் தேதி பல்வேறு கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகளுடன் நடைபெற்றது. தேர்தல் ஆணையம் வாக்கு எண்ணிக்கைக்கு கடுமையான கட்டுப்பாடுகளையும், விதிமுறைகளையம் விதித்திருந்தது. காலை 8 மணிக்கு தொடங்கி இரவு 10 மணி வரை நடைபெற்றது.
கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் மீண்டும் வெற்றி பெற்று தொடர்ச்சியாக இரண்டு முறை முதல்வரானார். கேரளாவில் இதுவரை எந்த கட்சியும் தொடர்ந்து ஆட்சிக்கு வந்தது இல்லை. ஆனால் இம்முறை அந்த வழக்கம் மாறியுள்ளது. இந்த தேர்தலில் இடது முன்னணி 8 தொகுதிகளில் கூடுதலாக வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் கூட்டணி 6 தொகுதிகளையும், காங்கிரஸ், ஐஎன்எல் ஆகியவை தலா ஒரு இடத்தையும் பிடித்துள்ளன.
ஜூன் 1 முதல் இறுதியாண்டு மாணவர்களுக்கு தேர்வுகள் – பல்கலை அறிவிப்பு!
தற்போது அமைச்சரவை முறைப்படி முதல்வர் பினராயி விஜயன் தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநர் ஆரிப் முகமதுகானை சந்தித்து அளித்தார். பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்றதை அடுத்து மீண்டும் இடது முன்னணி ஆட்சிக்கு வருகிறது. மீண்டும் பினராயி விஜயன் முதல்வர் ஆகிறார். புதிய அமைச்சரவை பதவி ஏற்கும் நாள் இன்னும் தீர்மானிக்கப்படவில்லை. இடது முன்னணி கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கேரளாவில் தொடர்ந்து 2வது முறையாக முதல்வர் பினராயி விஜயன் ஆட்சி அமைக்கிறார்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்