மீண்டும் ஊரடங்கிற்கு வாய்ப்பு – கொரோனா இரண்டாம் அலை எதிரொலி!!
கர்நாடகா மாநிலத்தில் கொரோனா தாக்கம் அதிகரித்து வரும் காரணமாக மீண்டும் ஊரடங்கு அறிவிக்க வாய்ப்புகள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து இன்று மாலை 5 மணிக்கு நடைபெறும் முதல்வர் தலைமையிலான ஆலோசனை கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மீண்டும் ஊரடங்கு:
நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக பல மாநிலங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் கர்நாடகா மாநிலத்தில் கொரோனா தாக்கம் ஜனவரி மாதத்திற்கு பிறகு தற்போது 900க்கு அதிகமாக கடந்துள்ளது. பெங்களூரு நகரில் மட்டும் 630 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
TN Job “FB Group” Join Now
இதன்படி கர்நாடகா மாநிலத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 9,59,338 ஆக அதிகரித்துள்ளது. கடந்த மாதம் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4000 முதல் 5000 வரை இருந்த நிலையில் தற்போது 8042 ஆக அதிகரித்துள்ளது. இதனால் கர்நாடக அரசு கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ளது. திருமண நிகழ்ச்சிகளில் கூட்டம் கூடுவதை தவிர்க்க திறந்தவெளி இடங்களில் திருமணம் நடந்தால் 500 பேர் கலந்து கொள்ளலாம் எனவும், மண்டபங்களில் நடந்தால் 200 பேர் கலந்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைனில் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு – மத்திய அரசு அனுமதி!!
இதுகுறித்து அம்மாநில சுகாதாரத்துறை கூடுதல் தலைமை செயலாளர் ஜவைத் அக்தர் கூறுகையில், “மாநிலம் முழுவதும் நோய் பரவலை கட்டுப்படுத்த புதிய நோய்த்தொற்று மண்டலங்கள் உருவாகாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மதம், அரசியல் சார்ந்த செயல்களில் 500 பேர் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. கொரோனா இரண்டாம் அலை தாக்கம் பரவாமல் இருக்க பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
ரயில் பயணச்சீட்டு வழங்க புதிய தொழில்நுட்பம் – தெற்கு ரயில்வே அறிமுகம்!!
மேலும் இதுகுறித்து தலைமைச் செயலகத்தில் முதல்வர் பி.எஸ் எடியூரப்பா தலைமையில் இன்று மாலை 5 மணிக்கு ஆலோசனை கூட்டம் நடத்தப்பட திட்டமிட்டுள்ளது. அதில் சுகாதாரத்துறை அலுவலர்கள், அரசுத்துறை அதிகாரிகள் போன்றோர் கலந்துகொள்ள உள்ளனர். கொரோனா இரண்டாம் அலை பரவி வருவதால் அதனை கட்டுப்படுத்த சிறந்த முடிவுகள் எடுக்கப்படும்”, இவ்வாறு அவர் தெரிவித்தார்.