ஆன்லைனில் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு – மத்திய அரசு அனுமதி!!

0
ஆன்லைனில் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு - மத்திய அரசு அனுமதி!!
ஆன்லைனில் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு - மத்திய அரசு அனுமதி!!
ஆன்லைனில் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு – மத்திய அரசு அனுமதி!!

தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு விவரங்களை மக்கள் தாங்களாக ஆன்லைனில் பதிவு செய்ய மத்திய அரசு தற்போது அனுமதி வழங்கியுள்ளது.

மக்கள் தொகை கணக்கெடுப்பு:

கடந்த 2020 ஆம் ஆண்டு தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பினை மக்கள் தாமாக ஆன்லைன் மூலமாக பதிவு செய்யும் திட்டத்தை மத்திய அரசு நடைமுறைப்படுத்த இருந்தது. அதன்பின் கொரோனா காரணமாக அந்த முறை நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் 2021 ஆம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு இன்னும் ஒரு மாதத்தில் நடத்தப்பட உள்ளதால் மீண்டும் இந்த நடைமுறையை தொடங்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

TN Job “FB  Group” Join Now

மக்கள் அவர்களை பற்றிய விவரங்களை ஆன்லைன் மூலமாக பதிவு செய்ய செயலி ஒன்றை அறிமுகப்படுத்த முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. இந்த ஆண்டு புதிய முறையில் மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கான விவரங்கள் எதுவும் இன்னும் வெளியிடவில்லை. இருந்த போதிலும் பிறந்தநாள், பிறந்த இடம், பெற்றோர் பிறந்த இடம், தாய்மொழி, ஆதார் எண், தொலைபேசி எண், வாக்காளர் அடையாள அட்டை எண், ஓட்டுநர் உரிமம் எண் போன்ற விவரங்கள் ஆன்லைன் மூலமாக பதிவு செய்ய சேகரிக்கப்பட்ட உள்ளன.

தமிழக அரசு உதவிபெறும் கல்லூரி மாணவர்களுக்கு கொரோனா உறுதி – கல்லூரி 3 நாட்களுக்கு விடுமுறை!!

மேற்கண்ட இந்த விவரங்களை சேகரித்த பின்னர் பதிவு செய்த ஒவ்வொருவருக்கும் ஒப்புகை எண் வழங்கப்படும். இந்த எண்ணை வீடு தேடி வரும் அதிகாரிகளிடம் காட்டினால் கணினி அல்லது செல்போன் மூலம் விவரங்களை சரிபார்த்து உறுதி செய்யப்படும். மேலும் இதற்காக மக்களிடம் இருந்து கைரேகை உள்ளிட்ட பயோமெட்ரிக் விவரங்கள் அல்லது ஆவணங்கள் எதுவும் சேகரிக்கப்படாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!