தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணம் குறித்த புகார்கள் – 42 குழுக்கள் அமைக்க கல்வித்துறை உத்தரவு!!
கர்நாடகாவில் தனியார் பள்ளிகளில் உள்ள கல்வி கட்டணத்தில் கொரோனா காரணமாக 30% கட்டணம் குறைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட நிலையில் மாணவர்களுக்கு கல்வி கட்டணம் அதிகம் வசூலிக்கும் பள்ளிகள் மீது உள்ள புகார்கள் பற்றி ஆய்வு செய்ய மாநிலம் முழுவதும் 42 குழுக்கள் அமைக்கப்ட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கல்விக்கட்டணம் குறைப்பு:
கொரோனா காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டன. ஆன்லைன் மூலமாக மாணவர்களுக்கு பாடங்கள் நடத்தப்பட்டன. இந்நிலையில் மாணவர்களுக்கு கல்வி கட்டணம் முழுமையாக வசூலிக்கப்படுவதாகவும், கொரோனா காலத்தில் வாழ்வாதாரத்தை இழந்த எங்களுக்கு அது பெரும் சிரமமாக உள்ளதாக பெற்றோர்கள் புகார் தெரிவித்தனர்.
மருத்துவ மாணவர்கள் வேறு கல்லூரிக்கு மாற அனுமதி வழங்குதல் – உச்சநீதிமன்றம் விளக்கம்!!
இதனால் கர்நாடகா அரசு தனியார் பள்ளிகளில் 2019-20 ஆம் ஆண்டுக்கான கல்வி கட்டணத்தை 30% குறைத்து உத்தரவு பிறப்பித்தது. பள்ளிகள் பெற்றோர்களிடம் 70% கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டது. ஆனால் அந்த உத்தரவை மீறி சில தனியார் பள்ளிகள் முழு கட்டணத்தையும் வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது.
தமிழகத்தில் துணை மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு – பிப்ரவரி 9 ஆம் தேதி நடைபெறும்!!
எனவே கர்நாடகா பள்ளிக்கல்வித்துறை சார்பில் கல்வி கட்டணம் தொடர்பான புகார்கள் இருந்தால் அதனை தெரிவிக்க மாநிலம் முழுவதும் 42 குழுக்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அவற்றில் பெங்களூருவில் 6 குழுக்கள், மைசூருவில் 2 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மற்ற மாவட்டங்களில் தலா ஒரு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்