வேலைநிறுத்த போராட்டத்தில் லாரி உரிமையாளர்கள்.. அதிகரிக்கப்போகும் அத்தியாவசிய பொருட்களின் விலை..??
2023 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வென்று காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த இரண்டு ஆண்டுகளில், டீசல் விலை இரண்டு முறை உயர்த்தப்பட்டு உள்ளது. மேலும், கடந்த மார்ச் 1ம் தேதி டீசல் மீதான விற்பனை வரியை 18.44 % இருந்து 21.17 % மீண்டும் உயர்த்தி, அரசு உத்தரவிட்டது. இதனால், டீசல் விலை லிட்டருக்கு ரூ.2 அதிகரித்த நிலையில் இந்த விலை உயர்வுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. பின்னர் இதுபற்றி விவாதிக்க மாநில லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் சண்முகப்பா தலைமையில் பெங்களூரில் கடந்த மார்ச் 5 ஆம் தேதி நடந்த ஆலோசனை கூட்டத்தில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட இருப்பதாக முடிவு செய்யப்பட்டது.
அதன்படி “கர்நாடகாவில் டீசல் விலை மற்றும் சுங்க கட்டண உயர்வை கண்டித்து லாரி உரிமையாளர்கள் இன்று (15-04-2025) வேலை நிறுத்தப் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இதனால் தமிழகம் மற்றும் வட மாநிலங்களுக்கு இடையேயான சரக்கு லாரி போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு காய்கறிகள் மற்றும் பழங்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது”.
























