பறிபோன சீரியல் வாய்ப்பு, போராடி வென்ற “கண்ணான கண்ணே” நிமிஷிகா – ரசிகர்கள் நெகிழ்ச்சி!
சன் டிவி “கண்ணான கண்ணே” சீரியலில் மீரா கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை நிமிஷிகா. கொரோனா காரணமாக அவர் நடித்த சீரியல்கள் நிறுத்தப்பட்ட நிலையில், மீண்டும் எவ்வாறு வாய்ப்பை போராடி வென்றார் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
நடிகை நிமிஷிகா:
கொரோனா காரணமாக ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்ட நிலையில் அதில் சின்னத்திரை நடிகர், நடிகைகளும் அடங்கும். பல தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான சீரியல்கள் படப்பிடிப்பு நடத்தப்படாமல் நிறுத்தப்பட்டன. மேலும் ஒரு சில சீரியல்கள் ஊரடங்கின் போது மட்டும் நிறுத்தப்பட்டு பின் மீண்டும் தொடங்கப்பட்டு வெற்றிநடை போடுகிறது. அந்த வகையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட சீரியல் நடிகை நிமிஷிகா பற்றி பார்க்கலாம். ஆந்திராவை சேர்ந்த அவர் படிப்பதற்காக கோவை வருகிறார்.
அதன் பின் சினிமாவில் ஏற்பட்ட ஆர்வம் காரணமாக தனியார் தொலைக்காட்சி ஒன்றில் விஜேவாக பணியாற்றி வந்தார், அதன் மூலமாக அவருக்கு விஜய் டிவி வாய்ப்பு கிடைத்தது. அவர் கடைக்குட்டி சிங்கம் சீரியலில் நடித்தார். அதில் நீலாம்பரி என்ற கதாபாத்திரத்தில் வில்லியாக நடித்தார். அதனால் அவருக்கு மக்களிடம் எதிர்ப்புகள் கிளம்பியது. இவர் தமிழ் மட்டுமல்லாமல் மலையாளத்தில் அனுராகம் என்ற சீரியலில் நடித்து வந்தார். ஆனால் இந்த இரண்டு சீரியல்களும் கொரோனா ஊரடங்கு காரணமாக நிறுத்தப்பட்டது.
என்னை தொந்தரவு செய்ய வேண்டாம் என சொன்ன அமிர்தா, எழில் நடத்தையை கவனிக்கும் பாக்கியா – இன்றைய எபிசோட்!
பின்னர் வாய்ப்பு தேடி அலைந்த நிமிஷிகாவிற்கு சன் டிவியில் கண்ணான கண்ணே சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்த சீரியலில் அப்பா, மகள் பாசத்தை மையமாக கொண்ட கதை அமைந்துள்ளது. அதில் அப்பாவாக நடிகர் பிரித்விராஜ் நடித்து வருகிறார். அவருக்கு மகள் கதாபாத்திரத்தில் நிமிஷிகா நடித்து வருகிறார். தனது மனைவியின் மரணத்திற்கு காரணம் தனது மூத்த மகள் தான் என்று அப்பா நினைப்பதால் அவளை வெறுத்து ஒதுக்குவதும், மகள் அப்பா பாசத்திற்கு ஏங்குவது இந்த சீரியலின் மைய கதை. மேலும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் நிமிஷிகா பல போட்டோஷூட்களை நடத்தி பல ரசிகர்களை கொண்டுள்ளார். மேலும் இவர் விரைவில் வெள்ளித்திரைக்கு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.