என்னை தொந்தரவு செய்ய வேண்டாம் என சொன்ன அமிர்தா, எழில் நடத்தையை கவனிக்கும் பாக்கியா – இன்றைய எபிசோட்!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில் எழிலிற்கு அமிர்தா அம்மா அப்பா போன் செய்து நிலா பற்றி கேட்கின்றனர். பின் எழில் மாற்றமாக இருப்பதை பாக்கியா கண்டுபிடிக்கிறார்.
பாக்கியலட்சுமி:
இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில்,எழில் அமிர்தாவுடன் மருத்துவமனையில் இருக்க, எழில் சொன்னதை நினைத்து அமிர்தா வருத்தப்படுகிறார். பின் அமிர்தா அம்மா அப்பா போன் செய்து நிலா பற்றி கேட்கின்றனர். அவளுக்கு எந்த பிரச்சனையும் இல்லை இன்னும் கொஞ்ச நேரத்தில் வீட்டிற்கு போகலாம் என சொன்னதாக சொல்கிறார். பின் பாக்கியா போன் செய்ய எழில் அமிர்தா குழந்தைக்கு முடியாமல் போனது என சொல்கிறார். பாக்கியா அமிர்தாவிடம் போனை கொடு என சொல்ல, பாக்கியா அமிர்தாவிடம் பேசுகிறார். பின் அமிர்தாவை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு வருகிறார்.
அமிர்தா எதுவும் பேசாமல் இருக்க, அமிர்தா அப்பாவிடம் மருந்து கொடுத்து கொடுக்க சொல்கிறார். ஆனால் அமிர்தா அப்பா நீயே சென்று கொடு என சொல்ல எழில் உள்ளே சென்று மருந்தை கொடுக்கிறார். அமிர்தா எதுவும் பேசாமல் இருக்க, எழில் அமிர்தாவின் நினைவுகளுடன் வீட்டிற்கு வருகிறார். எப்படி எல்லாம் சந்தோசமாக இருந்தோம் என நினைத்து கொண்டே வருகிறார். பாக்கியா ஜெனி சேர்ந்து சமையல் ஆர்டர் கணக்கு எல்லாம் பார்த்துக் கொண்டிருக்கிறார். அப்போது ஈஸ்வரி என்ன பண்ணுற என கேட்க, கணக்கு பாக்கிறேன் என சொல்கிறார்.
அப்போது எழில் வர பாக்கியா ஏன் சோகமாக இருக்க என கேட்கிறார். அப்போது ஈஸ்வரி என்ன தான் நண்பராக இருந்தாலும் இப்படி இரவெல்லாம் தூங்காமல் இருக்கணும் என்று அவசியம் இல்லை என சொல்கிறார். எழில் ஏன் ஒரு மாதிரி இருக்க என பாக்கியா கேட்க அதெல்லாம் ஒன்றுமில்லை என சொல்கிறார் எழில். அமிர்தா குழந்தைக்கு உடம்பு சரி இல்லை அது போக இரவெல்லாம் தூங்காமல் இருந்ததால் தான் ஒரு மாதிரி இருக்கிறது என எழில் சொல்ல, எத்தனை நாள் தூங்காமல் இருந்து இருக்க அப்போ எல்லாம் நீ இப்படி இல்லையே என சொல்ல, எனக்கு ஒரு டீ போட்டுக் கொடு எல்லாம் சரியாகிடும் என எழில் சொல்கிறார். மீண்டும் பாக்கியா எதுவும் பிரச்சனை இல்லையே என கேட்கிறார்.
பின் ஜெனி சமையல் அறையில் நின்று காபி போட்டுக் கொண்டிருக்க செழியன் வந்து என்ன பண்ற என கேட்கிறார். உனக்காக தான் காபி போட்டுக் கொண்டிருக்கேன் என சொல்ல, தேவையில்லாத வேலை எல்லாம் எதற்கு என செழியன் கேட்கிறார். நான் எப்படி காபி போடுகிறேன் என பாரு அப்படி சொல்லி ஜெனி காபி போடுகிறார். செழியனுக்கு கொடுத்து எப்படி இருக்கிறது என குடித்து பார்க்க சொல்ல எனக்கு வேண்டாம் என செழியன் சொல்கிறார். சும்மா குடி என சொல்ல செழியன் குடிக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.