கண்ணம்மா வீட்டிற்குள் புகுந்த மழைநீர், உதவி செய்வது போல் நெருக்கமாகும் பாரதி – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!

0
கண்ணம்மா வீட்டிற்குள் புகுந்த மழைநீர், உதவி செய்வது போல் நெருக்கமாகும் பாரதி - இன்றைய
கண்ணம்மா வீட்டிற்குள் புகுந்த மழைநீர், உதவி செய்வது போல் நெருக்கமாகும் பாரதி - இன்றைய "பாரதி கண்ணம்மா" எபிசோட்!
கண்ணம்மா வீட்டிற்குள் புகுந்த மழைநீர், உதவி செய்வது போல் நெருக்கமாகும் பாரதி – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில், கண்ணம்மா வீட்டிற்குள் தண்ணி வர பாரதி தண்ணீரை வெளியே தள்ள உதவி செய்கிறார். பின் சாந்தி வெண்பாவிற்கு போன் செய்து பாரதி பற்றிய உண்மையை சொல்கிறார்.

பாரதி கண்ணம்மா:

இன்று “பாரதி கண்ணம்மா” சீரியலில், கண்ணம்மா வீட்டில் பாரதி தூங்கி கொண்டிருக்க மழை பெய்யும் சத்தம் கேட்கிறது. பாரதி எழுந்து பார்க்க வெளியே பெரிய மழை பெய்கிறது. அப்போது பாரதி கிழே இறங்க வீடெல்லாம் தண்ணீர் இருக்கிறது. அதை பார்த்து பாரதி அதிர்ச்சி அடைய கண்ணம்மாவை எழுப்ப பார்க்கிறார் அவர் எந்திரிக்காமல் இருக்க கண்ணம்மாவை தொட்டு எழுப்புகிறார். பின் கண்ணம்மா என்ன நடந்தது என கேட்க வீடெல்லாம் தண்ணீர் வந்துவிட்டது என சொல்கிறார். என்ன பண்ணீங்க என கேட்க நான் ஒன்றும் செய்யவில்லை கதவை தான் திறந்தேன் என பாரதி சொல்கிறார்.

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” செட்டில் புகுந்த மழை நீர் – வெளியான இன்ஸ்டா வீடியோ!

பின் கண்ணம்மா நீங்க போங்க நான் பார்த்து கொள்கிறேன் என சொல்லி தண்ணீரை அள்ளி வெளியே கொட்டுக்கிறார். பாரதி கண்ணம்மாவை பார்த்து பாவப்பட்டு அவரும் தண்ணீரை அள்ள உதவி செய்கிறார். அப்போது பாரதிக்கு வழுக்கி விட கண்ணம்மாவுடன் நெருக்கமாக பாரதி வருகிறார். சாந்தி பாரதி கண்ணம்மா வீட்டிற்கு சென்றது பற்றி வெண்பாவிற்கு போன் செய்து சொல்கிறார். வெண்பா அதை கேட்டு அதிர்ச்சி அடைய உங்களை பெயிலில் எடுக்க மாட்டேன் என பாரதி சொல்லிவிட்டார். அவரை 8 வருடமாக காதலித்து உங்க வாழ்க்கையை கெடுத்துக் கொண்டீர்கள் என சாந்தி சொல்கிறார்.

மறுபக்கம் சௌந்தர்யா வேணு பாரதி அங்கே சென்று சண்டை போடாமல் இருக்க வேண்டும் என பேசிக் கொண்டிருக்க, அவன் சண்டை போடுவதாக இருந்தால் அங்கே சென்று இருக்கமாட்டான் என சௌந்தர்யா சொல்கிறார். இந்த ஒரு இரவு சென்றுவிட்டால் அவன் அங்கையே இருந்துருவான் என சௌந்தர்யா சொல்லி கண்ணம்மாவிற்கு போன் செய்கிறார். நைட் எல்லாம் நல்லபடியா தூங்குனீங்களா என சௌந்தர்யா கேட்க, இரவெல்லாம் மழை பெய்து வீடெல்லாம் தண்ணி அப்பறம் விடிய விடிய அள்ளி கொட்டுனோம். நான் அவரை வேண்டாம் என்று தான் சொன்னேன் அவராக தான் செய்தார் என கண்ணம்மா சொல்கிறார். அதை கேட்டு சௌந்தர்யா சந்தோசப்படுகிறார்.

பிரபல சீரியல்களுடன் போட்டி போடும் விஜய் டிவியின் “தென்றல் வந்து என்னை தொடும்” – ரசிகர்கள் வாழ்த்து!

ஹேமா லட்சுமி ஸ்கூலிற்கு கிளம்பிக் கொண்டிருக்கஅஞ்சலி தலை சீவி விடுகிறார். அப்போது லட்சுமி இப்படி சீவ கூடாது என என் அம்மா சொல்வாங்க என சொல்ல, அவ அம்மா மாதிரி சீவி விடு அஞ்சலி என சௌந்தர்யா சொல்கிறார். ஸ்கூலிற்கு தேவையான எல்லாம் எடுக்க ஹேமா அப்பாவை பார்க்கணும் போல இருக்கிறது என சொல்கிறார். அப்பாக்கு வேலை அதான் உன்னை பார்க்க வரமுடியவில்லை என சௌந்தர்யா சொல்ல, மதியம் உங்களுக்கு சமையல் அம்மா சாப்பாடு கொண்டு வருவாங்க என சொல்ல குழந்தைகள் சந்தோசப்படுகிறார்கள். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!