தமிழக குமரியில் இன்று உள்ளூர் விடுமுறை – மாற்று வேலை நாள் அறிவிப்பு
குமரி மாவட்டத்தில் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் கொடைவிழா முன்னிட்டு இன்று(மார்ச் 9) அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை என அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அரசு விடுமுறை:
கன்னியாகுமரி மாவட்ட மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் கொடைவிழா வருடம்தோறும் மார்ச் மாதம் 9 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு திருவிழா இன்று வெகு விமர்சியாக கொண்டாடப்பட்டு வருகிறது. குமாரி மாவட்டத்தில் உள்ள இந்த கோவில் பெண்கள் இருமுடி கட்டி இந்தக் கோயிலுக்கு வருவதால் பெண்களுக்கான சபரிமலை என அழைக்கப்படுகிறது. இந்த கோவிலில் பிப்ரவரி 28 ஆம் தேதி முதல் கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கப்பட்டு மார்ச் 9 ஆம் தேதி வரை 10 நாட்கள் நடத்தப்படுகிறது.
TN Job “FB Group” Join Now
இந்நிலையில் இன்று இந்த திருவிழாவின் கடைசி நாள் என்பதால் குமரி மாவட்டத்திற்கு மட்டும் இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின் படி குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் போன்றவற்றிற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டதால் இதற்கு மாறாக ஏப்ரல் மாதம் 10 ஆம் தேதி அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 356 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் பணிநியமனம் – உச்சநீதிமன்றம் கண்டனம்!!
சபரிமலை ஐயப்பன் கோயில் மற்றும் மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் சாதி,மத பேதம் எதுவும் இல்லாமல் பக்தர்கள் சென்று வழிபட்டு வருகிறார்கள். சபரிமலையில் பெண்கள் அனுமதி இல்லாத காரணத்தால் பெண்கள் விரதமிருந்து இருமுடி கட்டி இந்த கோவிலுக்கு புனித பயணமாக செல்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.