தமிழகத்தில் 356 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் பணிநியமனம் – உச்சநீதிமன்றம் கண்டனம்!!
தமிழகத்தில் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான நியமனத்தில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
உச்சநீதிமன்றம் கண்டனம்:
அரசு பள்ளிகளுக்கு 2,144 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களை தேர்வு செய்ய செப்டம்பர் மாதம் நடத்தப்பட்ட போட்டித்தேர்வுகளின் முடிவுகள் நவம்பர் 20 மற்றும் ஜனவரி 2ம் தேதி என்று இரண்டு கட்டங்களாக வெளியிடப்பட்டது. அதில் வேதியியல் பாடத்திற்காக 121 பின்னடைவு பணியிடங்கள், 215 நடப்பு காலியிடங்கள் என மொத்தம் 356 பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்தது.
TN Job “FB Group” Join Now
அந்த பணியிடங்களுக்கான நியமனத்தில் அதிக மதிப்பெண்கள் பெற்ற இட ஒதுக்கீட்டு பிரிவினரைப் பொதுப் பிரிவில் சேர்க்காமல், மிகவும் பிற்படுத்த மற்றும் சீர்மரபினருக்கான இட ஒதுக்கீட்டில் நியமித்திருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆசிரியர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பணிநியமனம் வழங்கப்பட்ட பட்டியலை மீண்டும் பரிசீலனை செய்து அதன்பின் காலியிடங்களை நிரப்ப வேண்டும் என உத்தரவிட்டனர்.
தமிழகத்தில் வாக்காளர்கள் அனைவருக்கும் கையுறை – தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்பு!!
தமிழக அரசு இந்த உத்தரவிற்கு எதிர்ப்பு தெரிவித்து மனுதாக்கல் செய்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் தமிழக அரசின் மேல்முறையீடு மனுவை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றத்தின் உத்தரவை நடைமுறைப்படுத்த உத்தரவிட்டனர். மேலும் அதிக மதிப்பெண்கள் பெற்ற மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு ஆசிரியர்களை பொதுப்பிரிவில் சேர்க்காமல் இட ஒதுக்கீட்டு பிரிவில் சேர்த்தது தவறு என்றும் கண்டனம் தெரிவித்தது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்