தமிழகத்தில் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பாடங்கள் – ஆசிரியர்களுக்கு பயிற்சி!!
தமிழகத்தில் மாணவர்களுக்கு கல்வி தொலைக்காட்சியில் காணொலி வாயிலாக பாடங்களை நடத்துவதற்கு ஆசிரியர்களுக்கு திருப்பூர் மாவட்டத்தில் பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது.
கல்வி தொலைக்காட்சி:
தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக பள்ளிகள் அனைத்தும் கடந்த 2020 மார்ச் மாதம் முதல் மூடப்பட்டுள்ளது. இதனால் மாணவர்களுக்கு கடந்த ஆண்டுக்கான இறுதி தேர்வுகள் நடைபெறவில்லை. அரையாண்டு, காலாண்டு தேர்வுகள் மற்றும் வருகைப் பதிவேடு ஆகியவற்றை அடிப்படையாக வைத்து இறுதி மதிப்பெண்கள் வழங்கப்பட்டது.
MOFPI நிறுவனத்தில் மத்திய அரசு பணி – ரூ.2,50,000 மாத ஊதியம்!!!
நடப்பு ஆண்டுக்கான வகுப்புகள் நேரடி முறையில் நடைபெறாத நிலையில் தனியார் பள்ளி மாணவர்களுக்கு பாடங்கள் ஆன்லைன் முறையில் நடத்தப்பட்டது. அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வி தொலைக்காட்சி வாயிலாகவும், சமுதாய வானொலி வழியாகவும் பாடங்களை கற்பிக்க அரசு ஏற்பாடுகள் செய்தது.
பயிற்சி வகுப்புகள்:
திருப்பூர் மாவட்டத்தில் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு இணைப்பு பாடங்களுக்கு செயல்பாடுகளுடன் கூடிய காணொலி தயாரிக்கும் பணியை அரசு ஒதுக்கியுள்ளது. இதற்காக ஆசிரியர்களை மாவட்ட நிர்வாகம் தேர்வு செய்துள்ளது. இவர்களுக்கான வழிகாட்டுதல் பயிற்சி நேற்று தனியார் பள்ளியில் நடந்தது. காணொலி பாடங்களை தயாரிக்கும் முறை குறித்து ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்