ஜூன் 29ம் தேதி பள்ளிகள் திறப்பு – ஆசிரியர்கள் 2 நாட்கள் முன்னதாக வர உத்தரவு!

0
ஜூன் 29ம் தேதி பள்ளிகள் திறப்பு - ஆசிரியர்கள் 2 நாட்கள் முன்னதாக வர உத்தரவு!
ஜூன் 29ம் தேதி பள்ளிகள் திறப்பு - ஆசிரியர்கள் 2 நாட்கள் முன்னதாக வர உத்தரவு!
ஜூன் 29ம் தேதி பள்ளிகள் திறப்பு – ஆசிரியர்கள் 2 நாட்கள் முன்னதாக வர உத்தரவு!

கொரோனா நோய்த்தொற்று பரவலுக்கு மத்தியில் கோடை விடுமுறை முடிந்து வருகிற ஜூன் 29ம் தேதி விதர்பாவில் பள்ளிகள் திறக்கப்படும் என மாநில பள்ளிக் கல்வித்துறை சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதுமட்டுமின்றி ஆசிரியர்கள் குறைந்தது 2 நாட்களுக்கு முன்னதாக வருகை புரிய வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

பள்ளிகள் திறப்பு:

நாடு முழுவதும் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கும் தேதி மாநில அரசுகளால் படிப்படியாக அறிவிக்கப்பட்டு வருகின்றன. கொரோனா நோய்த்தொற்று பரவல் குறைந்து தொடங்க உள்ள புதிய கல்வியாண்டு என்பதால் எவ்வித அச்சமும் இல்லாமல் நேரடி வகுப்புகள் செயல்படுவதை உறுதி செய்ய பள்ளிக் கல்வித்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. சில மாநிலங்களில் மாணவர்கள் முகக்கவசம் அணிவது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. மேலும் சுகாதாரத் துறையுடன் இணைந்து வழிகாட்டு நெறிமுறைகளுக்கும் தயார் செய்யப்பட்டு முறையாக பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரசின் இத்தகைய நடவடிக்கைகளுக்கு மாணவர்களும், பெற்றோர்களும் முறையான ஒத்துழைப்பை வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது.

அனைத்து ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு – ஆன்லைன் மூலம் புதிய உறுப்பினர் சேர்க்கை! வழிமுறைகள் இதோ!

தமிழகத்திலும் நாளை (ஜூன் 13) முதல் 1 – 10ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளில் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட உள்ளது. மகாராஷ்டிராவில் ஜூன் 15ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இருப்பினும் விதர்பாவில் திங்கள்கிழமை (ஜூன் 27) முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. அதன்படி ஜூன் 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில், பள்ளி ஆசிரியர்கள் வருகை புரிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை, இருப்பினும் தனிமனித இடைவெளியை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. இன்னும், பள்ளிகளில் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கைகள் குறித்து ஆசிரியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது.

Exams Daily Mobile App Download

ஆனால் பள்ளிகளில் குழந்தைகள் விதிகளைப் பின்பற்றுகிறார்களா இல்லையா என்பதைக் கண்காணிப்பது மிகவும் கடினமான ஒன்றாகும். இதனால் ஆசிரியர்கள் கவனமுடன் செயல்படுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து வகுப்பறைகள் சுத்தம் செய்யப்பட்டு மாணவர்களை வரவேற்க தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!