1 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 23 பள்ளிகள் திறப்பு – கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு!

0
1 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 23 பள்ளிகள் திறப்பு - கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு!
1 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 23 பள்ளிகள் திறப்பு - கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு!
1 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 23 பள்ளிகள் திறப்பு – கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு!

முதல்வர் ரங்கசாமியின் அறிவுரைப்படி, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் என அனைத்து பள்ளிகளில் படிக்கும் 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த முழு விவரத்தை இப்பதிவில் பார்க்கலாம்.

பள்ளிகள் திறப்பு:

கோடை வெப்பம் காரணமாக அனைத்து மாநிலங்களிலும் ஆண்டுத்தேர்வுகள் முன்கூட்டியே முடிந்து, மாணவர்களுக்கு கோடை விடுமுறை விடப்பட்டு உள்ளது. இந்நிலையில் புதுவையில், காமராஜர் கல்வித்துறை வளாகத்தில் அமைச்சர் நமச்சிவாயம் கல்வியாண்டு நாட்காட்டியை வெளியிட்டார். இந்த நாட்காட்டியில் பள்ளிகள் செயல்படும் நாள், விடுமுறை நாட்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் நமச்சிவாயம் கூறியது, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் 10, 11, 12ம் வகுப்புகளுக்கு கடந்த 5ம் தேதி தொடங்கிய பொதுத்தேர்வுகள் 31ம் தேதியுடன் முடிவடைந்தது.

Exams Daily Mobile App Download

மேலும் விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் 1ம் தேதி தொடங்கி நடைபெற உள்ளது. இதையடுத்து முதலமைச்சர் ரங்கசாமியின் அறிவுறுத்தலின்படி 2022-23ம் கல்வியாண்டுக்கு புதுச்சேரி, காரைக்கால் பிராந்தியங்களில் ஒன்று முதல் 10, 12ம் வகுப்புகளுக்கு கோடை விடுமுறை முடிந்து ஜூன் 23ம் தேதி அன்று பள்ளிகள் திறக்கப்படும். அன்றைய நாளிலேயே மாணவர்களுக்கு பாடப் புத்தகங்கள் மற்றும் சீருடை தொகை வழங்கப்படும். மேலும் அன்றைய தினமே மாணவர் பஸ் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன் – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

மேலும், புதுச்சேரியில் உள்ள பெரும்பாலான மாணவர்கள் தமிழ்நாடு வாரியத் தேர்வை எழுதுவதால், 11 ஆம் வகுப்புக்கான பள்ளிகள் திறப்பு , 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் 17ம் தேதி வெளியிட்ட பிறகு அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார். மேலும் 17ம் தேதி அன்று முதல் அரசு பள்ளிகளில் 11ம் வகுப்பு சேர்க்கை விண்ணப்பங்கள் வழங்கப்படும். இதை அடுத்து பள்ளிகள் திறப்பு தேதி தனியார் பள்ளிகளுக்கும் பொருந்தும். வரும் கல்வி ஆண்டில் சனிக்கிழமைகளில் பள்ளிகள் இயங்காது எனவும் தெரிவித்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!