தமிழகத்தில் விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன் – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
தமிழகத்தில் விவசாயிகளுக்கு என்று குறைந்த வட்டியில் பயிர்க்கடன், கால்நடை பராமரிப்பு கடன் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து அரியலூர் மாவட்ட ஆட்சியர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் வழங்கப்பட்டு வரும் கடன் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
விவசாயிகள் கவனத்திற்கு
தமிழகத்தில் விவசாயிகளுக்கு என்று பல்வேறு வகையான நலத்திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. இதில் குறிப்பாக தற்போது கூட்டுறவு வங்கிகளில் விவசாயத்திற்காக 5 சவரனுக்கு உட்பட்ட நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டு வருகிறது. இது விவசாயிகளுக்கு பேருதவியாக இருக்கும். அதன்படி தற்போது பல்வேறு இடங்களில் விவசாயிகளுக்கென்று குறைந்த வட்டியில் கடன் வழங்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக அரியலூர் மாவட்ட ஆட்சியர் அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் வழங்கப்படும் கடன் சங்கங்களில் வழங்கப்பட்டு வருகிற கடன் திட்டங்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
Exams Daily Mobile App Download
இந்த அறிவிப்பில், மாவட்டத்தில் அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகளுக்கு வட்டியில்லா பயிர்க்கடன், வட்டியில்லா கால்நடை பராமரிப்பு கடன், மாற்றுத்திறனாளிகளுக்கான கடன் மற்றும் குறைந்த வட்டியில் சுயஉதவிக்குழு கடன், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் கடன், விதவைகள் மற்றும் ஆதரவற்ற விதவைகளுக்கான கடன் உள்ளிட்ட கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் புதியதாக கூட்டுறவு சங்கங்களில் சேர விரும்புவர்களுக்கும் புதிய உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இதற்கு ரூ.110 பங்குத் தொகை மற்றும் நுழைவுக் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.
ஜூன் 8ம் தேதி பொது விடுமுறை – முக்கிய அறிவிப்பு வெளியீடு!
மேலும் இந்த அறிவிப்பில், மேற்கண்ட கடனுதவிகளை பெற விரும்பும் விவசாயிகள் ஆதார் நகல், ரேசன் கார்டு நகல், நிலவுடைமை தொடர்பான கணினி சிட்டா, பயிர் சாகுபடி தொடர்பாக விஏஓ அடங்கல் சான்று, பாஸ்போர்ட் அளவு புகைப்படம் உள்ளிட்ட ஆவணங்களை சமர்ப்பித்து அனைத்து வகையான கடனுதவிகளை பெறலாம். அத்துடன் இது தொடர்பாக புகார் அளிக்க விரும்புவர்கள் 7338720200 மற்றும் 7338720201 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு மண்டல இணைப்பதிவாளர், சரக துணை பதிவாளர் உள்ளிட்டோருக்கு தொடர்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.