ஜூன் 8ம் தேதி பொது விடுமுறை – முக்கிய அறிவிப்பு வெளியீடு!
அஸ்ஸாம் மாநிலத்தில் வரும் ஜூன் 8 ஆம் தேதி கர்பி ஆங்லாங் தன்னாட்சி கவுன்சில் (கேஏஏசி) தேர்தல் நடைபெற இருப்பதால் அரசு சார்ந்த மற்றும் அரசு அல்லாத தனியார் நிறுவனங்கள், வங்கிகள் என அனைத்திற்கும் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.
பொது விடுமுறை:
கர்பி ஆங்லாங் தன்னாட்சி கவுன்சில் (கேஏஏசி) தேர்தல் வரும் ஜூன் 8 அன்று நடைபெற இருப்பதாக அஸ்ஸாம் அரசாங்கம் அறிவித்துள்ளது. மேலும், தேர்தலின் காரணமாக கர்பி ஆங்லாங் மற்றும் போடோலாண்ட் டெரிடோரியல் கவுன்சிலின் (பிடிசி) கோக்லபாரியின் பகுதிகளுக்கு பொது விடுமுறை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கர்பி ஆங்லாங் தன்னாட்சி கவுன்சில் (கேஏஏசி) தேர்தல் தொடர்பாக மாநில அரசு ஒரு முக்கிய அறிவிப்பு ஒன்றையும் வெளியிட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
பிரிவு 25ன் கீழ் ஜூன் 8 2022 அன்று தேர்தல் நடைபெற இருப்பதால் பொது விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் அன்று அரசு சார்ந்த மற்றும் அரசு அல்லாத தனியார் வங்கிகள், தேயிலைத் தோட்டங்கள் மற்றும் தொழில்கள் உள்ளிட்ட அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள், கர்பி ஆங்லாங் தன்னாட்சி கவுன்சிலுக்கு உட்பட்டவைகள் அனைத்தும் மூடப்பட்டிருக்கும் என அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் அமலுக்கு வரும் ஊரடங்கு கட்டுப்பாடுகள்? சுகாதாரத்துறை எச்சரிக்கை அறிவிப்பு!
மேலும், போடோலாந்து பிராந்திய கவுன்சிலின் கீழ் எண்.22 கோக்லபாரி (ST) TC தொகுதி ஆகியவை ஜூன் 8 ஆம் தேதி மூடப்பட்டிருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கர்பி அங்லாங் மற்றும் மேற்கு கர்பி அங்லாங் மாவட்டங்களின் மொத்தமாக 26 கவுன்சில் தொகுதிகளில் தேர்தல் நடைபெற இருக்கிறது. மேலும் கர்பி ஆங்லாங் தன்னாட்சி கவுன்சில் (கேஏஏசி) தேர்தலுக்கான முடிவுகள் ஜூன் 12-ம் தேதி அறிவிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.