ஒரே நாளில் இரு தேர்வுகள் ! – மாற்று ஏற்பாட்டில் அரசு தீவிரம் !!!
இந்தியாவில் JEE தேர்வுகளும் தேசிய பாதுகாப்பு படை தேர்வுகளும் ஒரே நாளில் நடைபெற இருப்பதனால் மாணவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதற்கு மாற்று ஏற்பாடு செய்யப்படும் என்று மத்திய மனிதவள அமைச்சகம் அறிவித்து உள்ளது.
அதாவது இந்தியாவில் JEE நுழைவுத்தேர்வுகள் வரும் செப்டம்பர் மாதம் 1 முதல் 6 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. மேலும் தேசிய பாதுகாப்பு படை தேர்வுகளும் செப்டம்பர் மாதம் 06 ஆம் தேதி நடைபெற இருக்கிறது.
இவ்வாறு ஒரே நாளில் இரு தேர்வுகளும் நடைபெற்றால் இரண்டிற்கும் பதிவு செய்திருக்கும் மாணவர்களால் ஏதேனும் ஒரு தேர்வினை மட்டுமே எழுத முடியும். இதனால் அவர்கள் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர். எனவே தேர்வினை தள்ளி வைக்குமாறு மாணவர்கள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது.
இதற்கிடையே மத்திய மனிதவள அமைச்சர் ஒரு அறிவிப்பினை வெளியிட்டு உள்ளார். அதில் இரு தேர்வுகளும் ஒரே நாளில் நடைபெற இருப்பதனால் மாணவர்கள் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர். இதற்காக தேர்வுகள் கட்டுப்பாட்டு ஆணையத்தில் ஒரு குழு அமைக்கப்பட்டு பரிசீலிக்கப்படுகிறது. எனவே விரைவில் மாணவர்களுக்கு பயனளிக்கும் வகையில் முடிவு எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |