JEE தேர்வுகள் இனி மாநில மொழிகளிலும் நடைபெறும் – மத்திய அமைச்சகம் அறிவிப்பு
JEE மெயின் தேர்வுகள் ஆனது இனி அந்தந்த மாநில மொழிகளிலும் நடைபெறும் என மத்திய கல்வி அமைச்சகம் அறிவித்து உள்ளது. இது குறித்த மேலும் தகவல்களை கீழே அறிந்து கொள்ளலாம்.
புதிய கல்வி கொள்கை 2020 :
தற்போதைய காலகட்டத்தில் மோடி தலைமையிலான மத்திய அரசு கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. அதனடிப்படையில் முன்னதாக புதிய கல்விக்கொள்கை திட்டம் அமல்படுத்தப்பட்டது. அதேபோல் தற்போது உயர்கல்வித்துறையில் ஒரு முக்கிய அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது.
நாடு முழுவதும் உள்ள இந்திய தொழில்நுட்ப நிறுவனங்களின் பயிலகத்தில் சேர்ந்து பயில்வதற்கு மாணவர்கள் JEE எனப்படும் பொது நுழைவுத் தேர்வினை எழுத வேண்டும். அதில் தேர்ச்சி பெறுவதை பொறுத்தே இந்திய தொழில்நுட்ப நிறுவனங்களில் காலியிடங்களை பிடிக்க முடியும். இந்த தேர்வுகளை கூட்டு தேர்வு வாரியம் நடத்துகிறது. இந்த தேர்வுகள் இது வரை தேசிய மொழியில் தான் நடைபெற்றது.
மாநில மொழிகளில் தேர்வுகள் !
அதாவது இதுவரை JEE மெயின் தேர்வுகள் ஹிந்தி, ஆங்கிலம் மற்றும் குஜராத்தி ஆகிய மூன்று மொழிகளில் மட்டும் தான் தேர்வு நடைபெற்றது. ஆனால் இனிமேல் இந்த தேர்வுகளை மாநில மொழிகளிலும் எழுதலாம் என மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்கிரியால் தற்போது தெரிவித்து உள்ளார்.
மாநில கல்லூரிகளில் உள்ள காலியிடங்களை நிரப்ப பிராந்திய மொழிகளில் தேர்வுகள் நடத்தப்படும் என்றும், JEE மெயின் தேர்வு முடிவுகளை அடிப்படையாக கொண்டு சேர்க்கை நடத்தும் கல்லூரிகள் இதன்கீழ் இணைக்கப்படும். கூட்டு தேர்வு வாரியம் இனிமேல் நடக்க இருக்கும் தேர்வுகளை அந்தந்த மாநில மொழிகளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்