அனைவருக்கும் 7 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தல் – மாநில அரசு அறிவிப்பு!!
அசாம் மாநிலத்துக்கு புதிதாக வரும் நபர்கள் அனைவருக்கும் கட்டாய தனிமைப்படுத்துதல் தேவை என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. அரசு அலுவல் காரணமாக வருபவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
தனிமைப்படுத்துதல்
நாடு முழுவதும் அதிகரித்து வரும் கொரோனா பரவல் காரணமாக பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் நோய் பாதிப்பு பல லட்சங்களை தாண்டி பதிவு செய்யப்படுகிறது. இந்த நோய் தடுப்பு நடவடிக்கையாக பல மாநிலங்களில் இரவுநேர ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. அதன்படி அசாம் மாநிலத்தில் இதுவரை 2 லட்சம் பேர் நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2000 பலி எண்ணிக்கையும் பதிவு செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரு நாள் மட்டும் 1,664 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
முன்னதாக அம்மாநிலத்தில் கொரோனா பரவல் காரணமாக மளிகை கடைகள், வணிக வளாகங்கள் போன்றவற்றிற்கு 6 மணி வரை மட்டுமே அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. பொது போக்குவரத்து, திருமணங்கள், இறப்பு, மத வழிபாட்டு தலங்கள், கல்வி நிறுவனங்கள், அலுவலகங்கள் ஆகியவற்றிற்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அசாம் மாநிலத்தில் புதிதாக வருபவர்களுக்கு வீட்டு தனிமைப்படுத்துதல் கட்டாயம் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
மே 1 வரை புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல் – மாநில அரசு அறிவிப்பு!!
இது குறித்து அசாம் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா தெரிவிக்கையில், ‘அசாம் மாநிலத்துக்கு விமானம், ரயில் மூலமாக வருகை தரும் மக்கள் அனைவரும் கட்டாயமாக 7 நாட்கள் தனிமைப்படுத்துதலில் இருக்க வேண்டும். பரிசோதனையில் கொரோனா இல்லை என்று வந்தாலும் இந்த தனிமைப்படுத்துதல் கட்டாயம். அரசு அலுவல்கள், மருத்துவ காரணங்களுக்காக வருபவர்களுக்கு இந்த தனிமைப்படுத்துதலிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது’ என தெரிவித்துள்ளார்.