
IPL 2025 RR vs GT : போட்டியில் ராஜஸ்தான் அணி அபார வெற்றி.. 14 வயதில் புதிய வரலாறு படைத்தார் சூர்யவன்ஷி..!!
IPL தொடரின் 47வது போட்டி நேற்று (28-09-2025) ஜெய்ப்பூரில் நடைபெற்றது. இதில் குஜராத் அணிக்கு எதிராக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மோதியது. இப்போட்டியில் முதலில் ஆடிய குஜராத் அணி 20 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 209 ரன்கள் எடுத்து. பின்னர் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 15.5 ஓவரில் 212 குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
மேலும், நேற்று நடைபெற்ற போட்டியில் குஜராத் அணிக்காக விளையாடி சாய் சுதர்சன் (39), சுப்மன் கில் (84), ஜோஸ் பட்லர் (50) என அதிகபட்ச ரன்கள் எடுத்தனர். மறுபுறம் ராஜஸ்தான் அணிக்காக விளையாடிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் (70), ரியான் பராக் (32) மற்றும் வைபவ் சூர்யவன்ஷியின் (101) என அதிகபட்ச ரன்கள் குவித்தனர். மேலும், “14 வயதான வைபவ் சூர்யவன்ஷியின் அதிரடியான ஆட்டமே ராஜஸ்தானின் வெற்றிக்கு முழு காரணமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து, IPL போட்டி வரலாற்றில் இளம் வயதில் சதம் அடித்த வீரர் என்ற சாதனையை சூர்ய வன்ஷி படைத்துள்ளார்” என்பது குறிப்பிடத்தக்கது.

























