IPL 2025 Mega Auction: இன்று (24.11.2024) ஐபிஎல் மெகா ஏலம்.. அதிக விலைக்கு போகப்போவது யார்??
இந்தியன் பிரீமியர் லீக் 2025 தொடர் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் முதல் மே மாத இறுதி வரை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இன்று (நவம்பர் 24) தொடங்கவுள்ள மெகா ஏலம் பெரும் கவனம் ஈர்த்துள்ளது. 10 அணிகளுக்கும் சேர்த்து 204 வீரர்கள் தேவைப்படும் நிலையில் மொத்தமாக இந்த ஏலத்தில் 574 வீரர்கள் பங்கேற்கிறார்கள். இதில், இந்திய வீரர்கள் 366, வெளிநாட்டு வீரர்கள் 208 பேர். சவுதி அரேபியாவின் ஜெட்டாவில் நடைபெறவுள்ள ஏலம், இந்திய நேரப்படி இன்று மாலை 3.30 மணிக்கு தொடங்குகிறது. அதிகபட்ச விலையான ₹2 கோடிக்கு 81 வீரர்கள் பதிவு செய்துள்ளார்கள்.



























