பள்ளி மாணவர்களுக்கு சனிக்கிழமை “நோ பேக் டே” அறிமுகம் – அரசு உத்தரவு!

0
பள்ளி மாணவர்களுக்கு சனிக்கிழமை
பள்ளி மாணவர்களுக்கு சனிக்கிழமை "நோ பேக் டே" அறிமுகம் - அரசு உத்தரவு!
பள்ளி மாணவர்களுக்கு சனிக்கிழமை “நோ பேக் டே” அறிமுகம் – அரசு உத்தரவு!

கர்நாடகா மாநிலத்தில் பள்ளி மாணவர்களுக்கு புத்தக சுமையை குறைக்க, ஒவ்வொரு மாதமும் ஒரு சனிக்கிழமை “நோ பேக் டே” கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது.

நோ பேக் டே:

இந்தியாவில் பள்ளி மாணவர்களின் சுமையை குறைக்க “நோ பேக் டே” அறிவிப்பை பல மாநில அரசுகள் அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் கர்நாடகா மாநிலத்தில் குழந்தைகளின் கல்விச் சுமையைக் குறைக்கவும், கற்றலில் மகிழ்ச்சியை ஏற்படுத்தவும், ஒவ்வொரு மாதமும் ஒரு சனிக்கிழமையை ‘நோ பேக் டே’ ஆக கொண்டாட பள்ளிகளுக்கு பள்ளிக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சித் துறை உத்தரவிட்டுள்ளது.

Join Our WhatsApp  Group”  for Latest Updates

இந்த நாட்களில், பள்ளிகள் குழந்தைகளை பாடத்திற்கு அப்பாற்பட்ட செயல்களில் ஈடுபடுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சனிக்கிழமைகளில் குழந்தைகளை ஈடுபடுத்துவதற்கு பயன்படுத்தக்கூடிய செயல்பாடுகள் மற்றும் ஆசிரியர்களுக்கான வழிகாட்டி கையேடு போன்றவை கல்வித்துறை வழங்கி இருக்கிறது. மேலும் இந்த செயல்பாடுகள் குறித்து பள்ளிகள் மாதத்தில் ஒரு முறை அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருமணமாகாதவர்களுக்கான மாத ஓய்வூதிய திட்டம் – 70000 பேர் தகுதி!

கொரோனாவிற்கு முன்னதாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் கொரோனா காரணமாக இந்த நடைமுறை நிறுத்தப்பட்டது. தற்போது மீண்டும் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!