Infosys நிறுவன ஊழியர்களுக்கு சம்பள உயர்வு – ஜாக்பாட் அறிவிப்பு!
சம்பள உயர்வுக்காக காத்திருக்கும் ஐடி ஊழியர்களுக்கு ஒரு குட் நியூஸ் வந்துள்ளது. முன்னணி ஐடி நிறுவனமான இன்ஃபோசிஸ் தனது ஊழியர்களுக்கு சம்பளத்தை உயர்த்த முடிவு செய்துள்ள நிலையில் மற்ற ஐடி நிறுவனங்களும் ஊழியர்களுக்கு சம்பளத்தை உயர்த்துவது குறித்து ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜாக்பாட் அறிவிப்பு:
இந்தியாவின் முன்னணி ஐடி சேவை மற்றும் மென்பொருள் ஏற்றுமதி நிறுவனமாக விளங்கும் இன்போசிஸ் தற்போது ஊழியர்களைக் குஷிப்படுத்தும் வகையில் சம்பள உயர்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு மூலம் இந்திய ஐடி துறையில் புதிதாகப் போட்டி உருவாகியுள்ளது என்றால் மிகையில்லை. ஏற்கனவே ஊழியர்களைத் தக்க வைத்துக்கொள்ளப் போராடி வரும் நிலையில் இன்போசிஸின் இந்த அறிவிப்பு மற்ற நிறுவனங்களுக்கு சற்று கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
Exams Daily Mobile App Download
கொரோனா வருகைக்கு பின்னர், இந்திய ஐடி நிறுவனங்கள் தற்போது ஊழியர்கள் வெளியேற்றத்தின் பாதிப்பைக் குறைக்க அதிகப்படியான பிரஷ்ஷர்களைப் பணியில் அமர்த்தி வருகின்றனர். இந்நிலையில் இன்போசிஸ் நிர்வாகம், தனது ஊழியர்கள் மற்றும் பிரஷ்ஷர்களின் சம்பளத்தை உயர்த்த முடிவு செய்துள்ளது. இது மட்டும் அல்லாமல் புதிய சம்பள உயர்வு திட்டமும் நிறுவப்பட்டு உள்ளது. இந்தியாவில் உள்ள தனது ஊழியர்களுக்கு சராசரியாக 12-13 சதவிகித உயர்வு வழங்கப்படும். இது அதிக திறன் கொண்ட ஊழியர்களுக்கு தக்கவைப்பு போனஸ் உட்பட 20-25 சதவீதம் வரை சம்பளம் உயர்த்தப்படும் என இன்போசிஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
Tech Mahindra நிறுவனத்தில் நல்ல ஊதியத்தில் வேலை – இறுதி நாளுக்குள் விண்ணப்பிக்கவும்..!
இந்த அறிவிப்பு மூலம் இன்போசிஸ் நிறுவனத்தில் சேரும் பிரஷ்ஷர்களின் எண்ணிக்கை பெரிய அளவில் அதிகரிக்க உள்ளது. கடந்த நிதியாண்டில் 85,000 புதியவர்களை இன்ஃபோசிஸ் பணியமர்த்தியுள்ளது மற்றும் FY23 இல் சுமார் 50,000 கல்லூரி பட்டதாரிகளை பணியமர்த்த திட்டமிட்டுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்போசிஸ் நிறுவனத்தின் இந்த அறிவிப்பு மூலம் இந்த வருடம் அனைத்து ஐடி நிறுவனங்களும் தங்களது ஊழியர்களுக்கு அதிகப்படியான சம்பளம், பதவி உயர்வையும் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.