சென்னையில் காய்ச்சல் பரிசோதனை முகாம்கள் அதிகரிப்பு – மாநகராட்சி திட்டம்!!
கடந்த சில நாட்களாகவே சென்னையில் கொரோனா நோய்த்தொற்று வேகமெடுத்து வருகிறது. தற்போது இதனை தடுக்கும் பொருட்டு சென்னையில் காய்ச்சல் பரிசோதனை முகாம்களை அதிகரிக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
காய்ச்சல் பரிசோதனை முகாம்:
தமிழக்தில் தற்போது கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாவது அலை மிக வேகமாக வீசி வருகிறது. கடந்த ஆண்டை விட தற்போது தமிழகத்தில் மிக அதிகமாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னை, மதுரை போன்ற மாவட்டங்களில் கொரோனா அதிக அளவில் பரவி வருகிறது.
கொரோனா பாதித்தவர்கள் வசிக்கும் தெருக்கள் மூடல் – மாநகராட்சி அறிவிப்பு!!
தற்போது இதனை கட்டுப்படுத்துவதற்கு சுகாதாரத்துறையினர் முழுவீச்சில் செயல்பட்டு வருகின்றனர். அதன்படி நேற்று ஒரே நாளில் சென்னையில் சுமார் 1459 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று அதிகாரிகள் கூறி வருகின்றனர். சென்னையில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்கு காய்ச்சல் பரிசோதனை முகாம்கள் அமைத்து வந்தனர்.
TN Job “FB Group” Join Now
இந்த முகாம்கள் மூலம் கொரோனமா அறிகுறி இருந்தவர்களுக்கு தொற்று கண்டறியப்படும் முன்பே அவர்களுக்கு சிகிச்சை அளித்து வருவார்கள். அந்த வகையில் தற்போது சென்னையில் மீண்டும் கொரோனா நோய்த்தொற்று அதிகரிப்பதால் மாநகராட்சி அதிகாரிகள் காய்ச்சல் பரிசோதனை முகாம்களை அதிகரிக்க திட்டமிட்டுள்ளனர்.
இந்திய பயணிகளுக்கு தற்காலிக தடை – நியூஸிலாந்து அறிவிப்பு!!
இதனால் கொரோனா அறிகுறிகள் கண்டறியப்பட்டால் அவர்களுக்கு சிகிச்சை அளித்து உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை குறைக்கப்படும். அதன்படி நேற்று மட்டும் சென்னையில் உள்ள 200 வார்டுகளில் சுமார் 230 காய்ச்சல் பரிசோதனை முகாம்கள் நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனையும் அதிகரிக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.