பயணிகள், சரக்கு ரயில் கட்டணம் அதிகரிப்பு – இந்திய ரயில்வே திட்டம்!!
ரயில்வே துறையில் வழங்கப்பட்ட சலுகைகள் காரணமாக பெரும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் சரக்கு, பயணிகள் ரயில் கட்டணம் அதிகரிக்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற நிதிக்குழு ரயில்வே அமைச்சகத்திடம் பரிந்துரைத்துள்ளது.
ரயில்வே துறை அறிவிப்பு:
இந்தியாவின் மிகப்பெரிய துறையான ரயில்வே துறையில் ஏற்பட்ட நிதி நெருக்கடி காரணமாக கடந்த ஆண்டு ரயில்வே கட்டணத்தை உயர்த்தி அறிவிப்பு வெளியிடப்பட்டது. இருந்த போதிலும் ரயில்வே துறை வழங்கும் மாதாந்திர பயணச்சீட்டு, குறைந்த கட்டணங்கள், இலவச சேவை போன்ற பல சலுகைகள் காரணமாக ரயில்வே நிதித்துறை பெரும் வீழ்ச்சி அடைந்துள்ளது.
சிபிஎஸ்இ & ஜேஇஇ தேர்வு குழப்பம் காரணமாக மாணவர்களுக்கு மறுவாய்ப்பு – என்டிஏ அறிவிப்பு!!
எனவே இந்த சூழ்நிலையை சமாளிக்க சரக்கு மற்றும் பயணிகள் ரயில் போக்குவரத்துக்கான கட்டணத்தை உயர்த்த வேண்டும் என நாடாளுமன்ற நிதிக்குழு ரயில்வே அமைச்சகத்திடம் தெரிவித்துள்ளது. இந்த கட்டண உயர்வை மிகுந்த கவனத்துடன் கையாள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் செயல்முறை காரணமாக தினமும் ரயில் சேவையை நம்பி உள்ள சாமானிய மக்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகும் நிலைமை ஏற்படும்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்