அரசியலமைப்புத் திருத்தம்
திருத்தம் என்பது: பாராளுமன்ற இறையாண்மை மற்றும் எழுதப்பட்ட அரசியலமைப்பின் வேற்றுமைகளை அகற்றி சமரசப்படுத்துதல் ஆகும். – ஜவஹர்லால் நேரு.
- அரசியலமைப்பின் சரத்து 368 (பகுதி XX) அரசியலமைப்பையும் அதன் செயல்முறைகளையும் திருத்துவதற்கான அதிகாரத்தை பாராளுமன்றத்திற்கு வழங்குகிறது.
- பாராளுமன்றமானது அரசியலமைப்பினைத் திருத்தி புதிய பகுதிகளை சேர்ப்பதோ, மாற்றி அமைப்பதோ அல்லது நீக்கவோ முடியும். ஆனால் இதற்காக உருவாக்கப்பட்ட நடைமுறைகளை பின்பற்றியே செய்ய வேண்டும்.
- எனினும் பாராளுமன்றமானது அரசியலமைப்பின் “அடிப்படைக் கட்டமைப்பை”(Basic structure) மீறி திருத்தம் செய்யக்கூடாது. இவ்விதியானது கேசவானந்த பாரதி வழக்கில் (1973) உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் சேர்க்கப்பட்டது. அயர்லாந்து அரசியலமைப்பில் இருந்து எடுக்கப்பட்டது.
திருத்துவதற்கான செயல்முறைகள்
- அரசியலமைப்புத் திருத்த மசோதாவை பாராளுமன்றத்தில் மட்டும் அறிமுகப்படுத்த முடியும். மாநில சட்டமன்றத்தில் அறிமுகப்படுத்த முடியாது.
- இந்த மசோதாவை அமைச்சரோ அல்லது ஏதேனும் ஒரு பாராளுமன்ற உறுப்பினரோ அறிமுகப் படுத்தலாம். மேலும் இந்த மசோதாவிற்கு குடியரசுத் தலைவரின் முன் அனுமதி தேவையில்லை.
- இந்த மசோதா ஒவ்வொரு அவையிலும் சிறப்பு அறுதிப் பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட வேண்டும். அதாவது அவையின் மொத்த உறுப்பினர்களின் குறைந்தபட்சம் 2ஃ3 பங்கு வருகை புரிந்து வாக்களித்தல், அவையின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 50மூ மேல் அந்த மசோதாவிற்கு ஆதரவாக வாக்களித்திருக்க வேண்டும்.
- கூட்டாட்சி அமைப்பில் திருத்தம் கொண்டு வரப்பட்டால் நாட்டிலுள்ள மொத்த மாநிலங்களில் பாதிக்கு மேற்பட்ட மாநிலங்கள் ஒப்புதல் அளிக்கவேண்டும். இந்த மாநிலங்களின் சட்டசபையில் சாதாரண அறுதி பெரும்பான்மையினர் ஒப்புதல் அளித்தாலே போதுமானது.
- அரசியலமைப்புத் திருத்த மசோதாவை நிறைவேற்ற பாராளுமன்ற கூட்டுச் கூட்டத்தை கூட்ட இயலாது (ஷரத்து 108).
- அரசியலமைப்பு திருத்த மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டால் குடியரசுத்தலைவர் கட்டாயம் அம்மசோதாவிற்கு கையொப்பம் இடவேண்டும் (24 அரசியலமைப்பு திருத்தச் சட்டம்)
திருத்தத்தின் வகைகள்
- சாதாரண அறுதிப்பெரும்பான்மை
- சிறப்பு அறுதிப்பெரும்பான்மை
- சிறப்பு அறுதிப்பெரும்பான்மை அதனுடன் பாதிக்கு மேற்பட்ட மாநிலங்கள் ஒப்புதல் வழங்க வேண்டும்.
- சாதாரண பெரும்பான்மை
- அவைக்கு வருகை புரிந்து வாக்களித்தோரில் 50மூ மேல் ஆதரவாக வாக்களிப்பது
இந்த பெரும்பான்மை வாயிலாக திருத்தப்படும் இனங்களாவன:
- நிர்வாகம் அல்லது புதிய மாநிலங்களை உருவாக்குதல்
- மாநில எல்லைகளை மாற்றி அமைத்தல்
- மாநில சட்ட மேலவையை கலைப்பதோ அல்லது உருவாக்குவதோ (ஷரத்து 169)
- 2-வது அட்டவணையை திருத்துவதற்கு
- குறைந்தபட்ச உறுப்பினர் வருகையை (ஞரழசரஅ) மாற்றியமைக்க.
- பாராளுமன்ற உறுப்பினர்களின் ஊதியம் மற்றும் படிகள்.
- அலுவலக மொழியின் பயன்பாடு
- பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தல் தொகுதிகளை நீக்க.
- யூனியன் பிரதேசம் (ரு.வு)
- 5-வது அட்டவணை
- 6-வது அட்டவணை
- சிறப்புப் பெரும்பான்மை:
- அவையின் மொத்த உறுப்பினர்களின் 2ஃ3 பங்கிற்கு குறையாமல் வருகை புரிந்த மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையில் பாதிக்கு மேல் (50மூ) ஆதரவாக வாக்களிக்க வேண்டும்.
- இந்தப் பெரும்பான்மை வாயிலாக திருத்தப்படும் இனங்களாவன
- அடிப்படை உரிமைகள்
- அரசு நெறிமுறைக் கோட்பாடு
- 1 மற்றும் 3ம் பிரிவுகளில் இடம்பெறாத இனங்கள்
3. சிறப்புப் பெரும்பான்மை மற்றும் மாநில அரசுகளின் ஒப்புதல்
- அரசியலமைப்பில் கூட்டாட்சி தொடர்பான இனங்கள்
- குடியரசுத் தலைவர் தேர்தல் மற்றும் அதன் நடைமுறையை மாற்ற
- மத்திய மற்றும் மாநில நிர்வாகத்துறையின் அதிகாரத்தை நீட்டிக்க
- உச்ச மற்றும் உயர் நீதிமன்றம்
- மத்திய மற்றும் மாநில சட்டமன்ற அதிகார பங்கீடு
- 7-வது அட்டவணை
- பாராளுமன்றத்தில் மாநிலங்களின் பங்களிப்பு
- அரசியலமைப்பை ஷரத்து 368I பயன்படுத்தி திருத்துவதற்கான செயல்முறைகள்
சில அடிப்படைக் கட்டமைப்பின் உள்ளடக்கம்
உச்ச நீதிமன்றம், தனது ‘அடிப்படை அம்சங்கள்’ பட்டியலை ரத்து செய்வதற்கு மறுத்துவிட்டது. இது காறும் எடுக்கப்பட்ட வௌ;வேறு முடிவுகளிலிருந்து, பின்வரும் பட்டியல் பெறப்படலாம்:
- அரசியலமைப்புச் சட்டத்தின் உச்சநிலைத் தன்மை
- சட்டத்தின் ஆட்சி
- அதிகாரப் பிரிவினைக் கொள்கை
- அரசியலமைப்புச் சட்டத்தின் முன்னுரையில் குறிப்பாக வரையறுக்கப்பட்டுள்ள நோக்கங்கள்
- நீதிப்புனராய்வு; பிரிவுகள் 32 மற்றும் 226
- கூட்டாட்சித் தத்துவம்
- மதச்சார்பின்னை
- இறையாண்மை, ஜனநாயக, குடியரசுக் கட்டமைப்பு
- தனிநபரின் சுதந்திரம் மற்றும் கௌரவம்
- நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாடு
- ஒவ்வொர் அம்சத்திலும் அன்றி, சம நீதிக் கொள்கையின் ஒட்டுமொத்த சாராம்சத்தின் அடிப்படையிலான சமத்துவக் கொள்கை.
- பகுதி – மூன்றில் (III) இடம்பெற்றுள்ள பிற அடிப்படை உரிமைகளின் ‘சாராம்சம்’.
- ஒரு நல அரசைக் கட்டி எழுப்புவதற்கு சமூக மற்றும் பொருளாதார நீதியின் கருத்தியல் – பகுதி நான்கு (VI)
- அடிப்படை உரிமைகளுக்கும், வழிகாட்டி நெறிகளுக்கும் இடையே ஒரு சமநிலை.
- அரசாங்கத்தின் நாடாளுமன்ற அமைப்பு
- சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்கள் கொள்கை.
- பிரிவு 368-ன் மூலம் அளிக்கப்பட்டுள்ள, (அரசியல் அமைப்புச் சட்டத்)திருத்த அதிகாரங்களின் மேலுள்ள வரையறைகள்
- நீதித்துறையின் சுதந்திரத் தன்மை
- நீதியைப் பெறுவதற்கான திறன்மிக்க வாய்ப்பு – வழிவகை
- பிரிவுக்ள – 32, 136, 141, 142 – ஆகியவற்றின் கீழ் உச்ச நீதிமன்றத்திற்குள்ள அதிகாரங்கள்
- ஒரு சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட மத்தியஸ்த தீர்ப்பாயங்களால், அரசின் நீதியியல் அதிகாரத்தைச் செயற்படுத்துவகையில் தீர்ப்புகள் (முடிவுகளை ரத்து செய்யக் கோருகிற சட்டமியற்றல்) சட்டம்.
PDF Download
Download TNPSC அரசியலமைப்பு பாடக்குறிப்புகள்
Download TNPSC பொது தமிழ் பாடக்குறிப்புகள்
WhatsApp Group -ல் சேர – கிளிக் செய்யவும்
Facebook Examsdaily Tamil – FB ல் சேர – கிளிக் செய்யவும
Telegram Channel கிளிக் செய்யவும்