இந்திய ராணுவ கல்லூரியில் நர்சிங் படிப்புகள் – விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்!!
இந்திய ராணுவத்தில் காலியாக உள்ள 220 பி.எஸ்சி நர்சிங் 4 வருட படிப்பிற்கான மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க மார்ச் 10 ஆம் தேதி (நாளை) கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பி.எஸ்சி நர்சிங் பணியிடங்கள்:
இந்திய ராணுவ கல்லூரியில் காலியாக உள்ள இடங்களுக்கான மாணவர் சேர்க்கை குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி 220 பி.எஸ்சி நர்சிங் 4 வருட படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த படிப்புகளில் சேர கல்யாணம் ஆகாத பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் அல்லது விதவைகள், சட்டப்படி விவாகரத்தான பெண்கள் கூட விண்ணப்பிக்கலாம்.
TN Job “FB Group” Join Now
12 ஆம் வகுப்பு தேர்ச்சி அடைந்த மாணவிகள், இயற்பியல், வேதியியல், உயிரியியல் அல்லது தாவரவியல், விலங்கியல், ஆங்கிலம் பாடப்பிரிவுகளில் 50 சதவிகிதத்திற்கு மேல் மதிப்பெண் பெற்ற மாணவிகள் சேரலாம். இந்த படிப்புகளுக்கு ஆன்லைன் மூலமாக எழுத்துத்தேர்வு, அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு நேர்முகத்தேர்வு நடத்தப்படும். அதன்பின் அவர்களுக்கு உடற்தகுதித் தேர்வு நடத்தப்படும்.
மார்ச் 15, 16ம் தேதிகளில் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் – பொதுச்செயலாளர் அறிவிப்பு!!
அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாணவர் சேர்க்கை வழங்கப்படும். இந்த படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் அனுப்ப விண்ணப்ப கட்டணம் ரூ.750 வசூலிக்கப்படுகிறது. இந்த விண்ணப்பங்கள் அனுப்ப நாளை (மார்ச் 10) ஆம் தேதி கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படிப்பு மற்றும் தேர்வுகள் குறித்த விவரங்கள் அறிய www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தை பார்க்கலாம்.