இந்தியாவில் தற்காலிக ஊரடங்கு உத்தரவு – அமெரிக்க மருத்துவர்!!
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை வேகமெடுத்து பரவுவதால் இந்தியாவில் தற்காலிக ஊரடங்கு பிறப்பிக்க வேண்டும் என அமெரிக்க தலைமை மருத்துவர் அந்தோணி பவுசி யோசனை தெரிவித்துள்ளார்.
தற்காலிக ஊரடங்கு:
கடந்த வருடத்தை விட தற்போதைய கொரோனா இராண்டாம் அலை இந்தியாவில் மின்னல் வேகத்தில் பரவியுள்ளது. நோய் பரவலை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்து வருகின்றன. உலகிலேயே தற்போது கொரோனா வைரஸ் அதிகம் பாதித்த நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. இந்நிலை தொடர்ந்தால் நாம் பல உயிர்களை இழக்கும் நிலை ஏற்படும் என சுகாதாரத்துறை கூறுகிறது.
இந்தியாவின் தற்போதைய கொரோனா நிலை குறித்து அமெரிக்க தலைமை மருத்துவர் மற்றும் பெருந்தொற்று நிபுணருமனா அந்தோணி பவுசி ஆங்கில நாளிதழ் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார். அதில் அவர் இந்தியாவில் தொற்று அதிகரிப்பதால் தற்காலிகமான ஊரடங்கை ஏற்படுத்த வேண்டும் என அவர் கூறினர். அவரச கால நடவடிக்கையாக சுவாச கருவிகளை உடனடியாகப் பெற்று மக்களுக்கு வழங்க வேண்டும். இந்தியாவை விட அதிக மக்கள் தொகை கொண்ட சீன நாட்டில் கொரோனா பரவலின் போது 6 மாத காலம் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.
வீட்டில் தனிமைபடுத்திக் கொள்ள புதிய வழிமுறைகள் – மத்திய சுகாதாரத்துறை!!
ஆனால் இந்தியாவில் தற்காலிகமாக ஊரடங்கு பிறப்பித்தாலே போதுமானதாகும். சீன அரசு எடுத்த நடவடிக்கைகளை இந்திய அரசு பின்பற்ற வேண்டும் எனவும் தெரிவித்தார். மருத்துவமனைகளை அதிகரிக்க வேண்டும். இராணுவத்தினரிடம் இருந்து என்ன உதவிகளை பெற முடியுமே அதையும் பெற வேண்டும் என இந்தியாவிற்கு சில வழிகாட்டுதல்களை கூறியள்ளார் மருத்துவர் அந்தோணி பவுசி.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்