ரயில்வே ஊழியர்களுக்கு தசரா பண்டிகையை முன்னிட்டு வந்த நல்ல செய்தி – வாரியம் வெளியிட்ட அறிவிப்பு!
இந்திய ரயில்வே வாரியம் தசரா பண்டிகையை முன்னிட்டு தங்களுடைய ஊழியர்களுக்கு அகவிலைப்படி 4% அதிகரிப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
ரயில்வே வாரியம் அறிவிப்பு
இந்திய மக்கள் தீபாவளி பண்டிகையை எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில் அரசு ஊழியர்களுக்கு அடுத்தடுத்து நல்ல செய்தி வந்த வண்ணம் இருக்கிறது. அந்த வகையில் ரயில்வே ஊழியர்களுக்கு தசரா பரிசாக 4% அகவிலைப்படி உயர்வை வழங்க இருப்பதாக ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது. இந்த இது தொடர்பாக அக்டோபர் 23, 2023 அன்று அகில இந்திய ரயில்வே மற்றும் உற்பத்தி பிரிவுகளின் பொது மேலாளர்கள், தலைமை நிர்வாக அதிகாரிகளுக்கு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தமிழக அரசுப்பள்ளி மாணவர்களுக்கு காத்திருக்கும் பரிசு மழை – கல்வித்துறையின் சூப்பர் ஏற்பாடு!
அதில் ரயில்வே ஊழியர்களுக்கு வழங்கப்படும் பணிக்கொடையானது 2023 ஜூலை 1 முதல் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக அகவிலைப்படி 42 சதவீதம் வழங்கப்பட்ட நிலையில் தற்போது 46 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த உயர்த்தப்பட்ட டிஏ தொகை ரயில்வே ஊழியர்களுக்கு அடுத்த ஊதியத்தில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.