இந்தியாவில் “ஒரே நாடு ஒரே தேர்தல்” திட்டம் – தேர்தல் ஆணையம் அளித்த முக்கிய விளக்கம்!
ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் குறித்து எந்த அதிகாரபூர்வமான தகவலும் இந்திய தேர்தல் ஆணையத்திடம் இருந்து வரவில்லை என தமிழக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தேர்தல் ஆணையம்:
நாடு முழுவதும் மாநில அரசுகள் நாடாளுமன்ற தேர்தலுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தமிழக தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது தேர்தலுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் 35 சதவீதம் கூடுதலாக வைத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வருகிற நவம்பர் மாதம் வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணி தொடங்க இருப்பதாகவும் விரைவில் முதற்கட்டமாக வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.
தமிழகத்தில் பரவும் பன்றி காய்ச்சல் – ஒருவர் உயிரிழப்பு… பீதியில் மக்கள்!
மேலும் ஜனவரி மாதம் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் விரைந்து வெளியிடப்படும். கடந்த 2014 ஆம் ஆண்டு பிரதமர் ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை அறிவித்தார். இது தற்போது சாத்தியமில்லை. ஆனால் மோடி அரசு அதற்கு தயாராகி வருகிறது. இந்த திட்டம் தொடர்பாக எந்த அதிகாரப்பூர்வமான தகவலும் இந்திய தேர்தல் ஆணையத்திடம் இருந்து இதுவரை வரவில்லை என்று தமிழக தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.