இந்திய பாதுகாப்பு செய்திகள் – பிப்ரவரி 2019
இங்கு பிப்ரவரி மாதத்தின் இந்திய பாதுகாப்பு செய்திகள் பற்றிய விவரங்களை வழங்கியுள்ளோம். இதை படித்தால் UPSC, TNPSC, SSC, RRB தேர்வுகளில் பொது அறிவு – நடப்பு நிகழ்வுகள் பிரிவில் கேட்க படும் கேள்விகளுக்கு எளிதில் பதில் அளிக்கலாம்.
மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் – பிப்ரவரி 2019
பிப்ரவரி மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் Quiz PDF Download
இராணுவப்பயிற்சி கட்லாஸ் எக்ஸ்பிரஸ் 2019
- INS Trikand, இந்திய கடற்படை ஒரு முன்னணி போர் கப்பல், 27 ஜனவரி 06 பிப்ரவரி 19 அன்று நடைபெற்ற பன்னாட்டு இராணுவப்பயிற்சி ‘CUTLASS எக்ஸ்பிரஸ் – 19’ பங்கேற்றது. இந்த நடைமுறையின் நோக்கம் சட்ட அமலாக்க திறனை மேம்படுத்தவும், பிராந்திய பாதுகாப்பு மற்றும் மேற்கத்திய இந்திய பெருங்கடலில் சட்டவிரோத கடலோர நடவடிக்கையை குறுக்கிட நோக்கமாக பங்குபெறும் நாடுகளின் ஆயுதப்படைகளுக்கு இடையேயான செயல்திறனை மேம்படுத்துவதாகவும் இருந்தது.
ஜெய்ப்பூரில் ‘ராகத் இராணுவப்பயிற்சி’
- ராஜஸ்தானில், இந்திய இராணுவத்தின் ஜெய்ப்பூர் சப்த சக்தி கமேண்ட் இரண்டு நாள் கூட்டு பேரிடர் மீட்பு மேலாண்மை மற்றும் உதவும் “ராகத் இராணுவப் பயிற்சி” நடத்துகிறது.
ஏரோ இந்தியா
- பிப்ரவரி 20 மற்றும் 24க்கு இடையே ஏரோ இந்தியாவின் 12வது பதிப்பு திட்டமிடப்பட்டுள்ளது. பெங்களூரில் இந்த மாதம் நடைபெறவிருக்கும் பிரதான விமான நிகழ்ச்சியான ஏரோ இந்தியா 2019ல் பிரஞ்சு பாதுகாப்புத் துறை ஒரு முக்கிய பங்கு வகிக்க உள்ளது.
பாரலல் டாக்ஸி ட்ராக்
- இந்திய விமானப்படையில் முதன் முதலாக, “OTTERS” ஸ்காவாட்ரான் வெஸ்டர்ன் ஏர் கமாண்ட்டில், டார்னியர் 228 விமானத்தில் முழு பெண்கள் குழுவுடன் பாரலல் டாக்ஸி ட்ராக் (PTT) செயல்முறைகளை மேற்கொண்டுள்ளது. விமானிகள், Sqn Ldr கமல்ஜீத் கவுர் மற்றும் அவரது இணை விமானி Sqn LDR ராகி பண்டாரி சிர்ஸாவில் பாரலல் டாக்ஸி ட்ராக் டேக் ஆப் மற்றும் தரையிறங்கும் செயல்முறைகளை வெற்றிகரமாக மேற்கொண்டனர்.
ராஜஸ்தான் பொக்ரானில் இந்திய விமானப்படை பயிற்சி
- ராஜஸ்தானில் இந்திய-பாக் எல்லைக்கு அருகே பொக்ரானில் ‘விமானப்படைபயிற்சி வாயு சக்தி 2019’ நடைபெறுகிறது, இதில் நாட்டின் முழு போர் திறன்களை இந்திய விமானப்படை நிரூபிப்பதாக அமைந்துள்ளது. ஆகாஷ் ஏவுகணை தாக்குதல், மேம்பட்ட லைட் ஹெலிகாப்டர் மூலம் துப்பாக்கிச்சூடு மற்றும் மிக் 29 விமானம் மூலம் விமானத்திலிருந்து தரையில் உள்ள இலக்குகளை துல்லியமாக தாக்குவது போன்றவை இந்த பயிற்சியில் அரங்கேறும்.
- பாதுகாப்பு மந்திரி நிர்மலா சீதாராமன் இந்த நிகழ்வில் கலந்து கொள்ள உள்ளார்.
- இலக்குகளை கண்டறியும் திறன், பல ஸ்பெக்ட்ரம் திறன் கண்டறியும் திறன், விரைவாக அடையாளம் காணல் மற்றும் துல்லியமாக இலக்குகளைத் காண்பிக்கும் திறன் ஆகியவை காண்பிக்கப்படும்.
ஏரோ இந்தியா 2019
- 5 நாள் ஏரோ இந்தியா கண்காட்சியில் பாதுகாப்பு காரணங்களுக்காக, ஆளில்லா விமானம் அல்லது டிரோன்ஸ், ஆளில்லா விமானம் அமைப்புகள் மற்றும் பலூன்கள் பறக்க தடை செய்யப்பட்டுள்ளன.
எல்சிஏ தேஜாஸ் எம்.கே.I-ற்கு இறுதி செயல்பாட்டு அனுமதி
- இந்திய விமானப்படை (IAF) லைட் காம்பாட் ஏர்லைன்ஸ் தேஜாஸ் MK I க்கான இறுதி செயல்பாட்டு அனுமதிக்கான (FOC) முறையான அறிவிப்பு செயலாளர் R & D மற்றும் தலைவர் DRDO டாக்டர் ஜி சதீஷ் ரெட்டி அவர்களால் அனுமதி வழங்கப்பட்டது.
ஏரோ இந்தியா 2019
- பெங்களூரு எலஹங்கா விமானப்படை தளத்தில் 12-வது சர்வதேச ஏரோஸ்பேஸ் கண்காட்சி மற்றும் பாதுகாப்பு கண்காட்சி ஏரோ இந்தியா 2019-ஐ பாதுகாப்பு மந்திரி நிர்மலா சீதாராமன் திறந்து வைத்தார்.
முதல் ட்ரோன் ஒலிம்பிக்ஸ் போட்டி
- யேலாஹங்கா, பெங்களூருவில் நடைபெற்ற ஏரோ-இந்தியா 2019ல் முதல் ட்ரோன் ஒலிம்பிக் போட்டியில் ஆளில்லா பறக்கும் விமானங்களுடன் சிறப்பாக நடைபெற்றது.
- தீம் – ‘ஒரு பில்லியன் வாய்ப்புகளுக்கான ஓடுதளம்‘.
இந்திய விமானப்படை தீவிரவாதிகள் மீது வான்வழித் தாக்குதல் நடத்தியது
- பாகிஸ்தானின் பாலகோட்டிலுள்ள ஜெய்ஷ்-இ-முகம்மது (JeM) அமைப்பின் மிகப்பெரிய பயங்கரவாத முகாம் மீது இந்திய விமானப்படை வான்வழித் தாக்குதல் நடத்தியது.
QRSAM ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக சோதனை செய்தது
- ஒடிசா கடற்கரை ITR சண்டிபூரில் உள்நாட்டில் தயாரான அதிவேக (வான் பாதுகாப்பு ஏவுகணை) ஏவுகணையை (QRSAM), பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) வெற்றிகரமாக சோதனை செய்தது. இரண்டு ஏவுகணைகள் வெவ்வேறு உயரத்திற்கும் நிலைகளுக்கும் சோதிக்கப்பட்டன.
‘Sampriti 2019’
- இந்தியா மற்றும் வங்கதேசம் இடையே கூட்டு ராணுவ பயிற்சி ‘Sampriti 2019’ 8வது பதிப்பு வங்கதேசத்தின் தங்காலில் நடத்தப்படுகிறது. இது இரு நாடுகளிலும் மாறி மாறி நடத்தப்படும் இராணுவப்பயிற்சி ஆகும்.
2700 கோடி ரூபாய் மதிப்புள்ள பாதுகாப்பு உபகரணங்கள் வாங்க ஒப்புதல்
- 2700 கோடி ரூபாய் மதிப்புள்ள பாதுகாப்பு உபகரணங்கள் வாங்குவதற்கு பாதுகாப்பு கையகப்படுத்தல் கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது.
- கடற்படைக்கு மூன்று கேடட் பயிற்சி கப்பல்கள் கையகப்படுத்துதல் ஆகியவை இதில் அடங்கும், அடிப்படை கடல் பயிற்சி அளிக்க பெண்கள் அதிகாரி உட்பட அனைவருக்கும் உதவும்.
PDF Download
நடப்பு நிகழ்வுகள் 2018 – 2019
Whatsapp குரூப்பில் சேர – கிளிக்செய்யவும்
Telegram Channel ல் சேர – கிளிக்செய்யவும்