நாடு முழுவதும் இரவு நேரங்களில் 144 தடை உத்தரவு – மத்திய அரசு அனுமதி!!
நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் வேகமாக பரவி வருவதால் இரவு நேரங்களில் 144 தடை உத்தரவை அனைத்து மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் கடைபிடிக்கலாம் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மத்திய அரசு அறிவிப்பு:
நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் கடந்த சில வாரங்களாக உச்சம் பெற்றுள்ளது. அரசும் பல கட்டுப்பாடுகள் மூலமாக பல முயற்சிகளை எடுத்துள்ளது. ஆனாலும் கொரோனா கட்டுக்குள் வரவில்லை. பல்வேறு மாநிலங்களில் இரவு ஊரடங்கு, முழு ஊரடங்கு, வார இறுதி நாள் ஊரடங்கு என அமல்படுத்தப்பட்டு கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பின் படி, “இரவு நேரங்களில் மக்கள் கூட்டமாக கூடுவதை கட்டுப்படுத்த 144 தடை உத்தரவை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் பயன்படுத்தலாம். ஆனாலும் கடந்த ஆண்டை போல மாநிலங்களுக்கு உள்ளே மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வரும் பேருந்துகளுக்கு தடை விதிக்க கூடாது.
மக்கள் வீடுகளில் கூட முகக்கவசம் அணிய வேண்டும் – மத்திய அரசு அறிவுறுத்தல்!!
அனைத்து மக்களும் கொரோனா தடுப்பூசி மையங்களை அதிகரிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். மேலும் மக்கள் வீட்டுக்குள் இருந்தாலும் மாஸ்க் அணிவது நல்லது. ரயில் போக்குவரத்தில் 50 சதவிகித பயணிகளை அனுமதிக்கலாம்”, என ஆலோசனை தெரிவித்தனர்.