இந்தியாவில் ஒரே நாளில் புதிதாக 39,361 பேருக்கு கொரோனா – 416 பேர் உயிரிழப்பு!
நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் நேற்று ஒரே நாளில் 39,361 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 416 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்து உள்ளனர்.
கொரோனா பாதிப்பு:
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காரணமாக பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டது. இதனை சரி செய்ய கடந்த மே மாதம் முதல் பல மாநிலங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன. அதன் காரணமாக கொரோனா பரவல் குறையத் தொடங்கி உள்ளது. கொரோனா மூன்றாம் அலை தாக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதால் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் கொரோனா பரவல் குறைவாக உள்ள மாநிலங்களில் தளர்வுகள் வழங்கப்பட்டு மக்கள் தங்களது இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர்.
தமிழகத்தில் 2 ஆம் நிலை காவலர்களுக்கான உடல் தகுதித்தேர்வு – இன்று முதல் துவக்கம்!
இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 39,361 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு 3,05,79,106 ஆக உயர்ந்துள்ளது. அதே போல 35,968 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்துள்ளனர். அதே போல 416 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். இதுவரை இறந்தவர்கள் எண்ணிக்கை 4,20,967 பேராக உயர்ந்துள்ளது.
TN Job “FB Group” Join Now
மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இதுவரை மருத்துவமனைகளில் 4,11,189 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை நாடு முழுவதும் 43,51,96,001 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கொரோனா மூன்றாம் அலையை தடுக்க மக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்தும், சமூக இடைவெளி கடைப்பிடித்தும், தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.