இந்தியாவில் ஒரே நாளில் 41,195 பேருக்கு கொரோனா தொற்று – 490 உயிரிழப்பு!
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 41,195 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 490 கொரோனா நோயாளிகள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
கொரோனா நிலவரம்:
மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டு உள்ள அறிக்கையின் படி, இந்தியாவில் மொத்த கொரோனா பலி எண்ணிக்கை 4,29,669 ஆக அதிகரித்துள்ளது. மேலும் நேற்று மட்டும் புதிதாக அனைத்து மாநிலங்களிலும் 41,195 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா இரண்டாம் அலையை கட்டுப்படுத்த அரசு பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறது. அதில் முக்கிய ஒன்றாக கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது.
WhatsApp Web பயனர்களுக்கு சூப்பர் அப்டேட் – இமேஜ் எடிட்டர் அறிமுகம்!
நேற்று மட்டும் நாடு முழுவதும் 44,19,627 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை மொத்தமாக 44,19,627 பேர் தடுப்பூசியை செலுத்தி கொண்டுள்ளனர். இதனால் பாதிப்பு எண்ணிக்கையும் கடந்த மாதங்களை விட குறைந்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 3,87,987 நோயாளிகள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா நோயாளிகள் தனி சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு தொடர் கண்காணிப்பில் இருந்து வருகின்றனர்.
TN Job “FB Group” Join Now
பூரண குணமடைந்த பிறகு மீண்டும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு அதன் பிறகு டிஸ்சார்ஜ் செய்யப்படுவர். தொற்றிலிருந்து கடந்த 24 மணி நேரத்தில் 39,069 பேர் மீண்டு வீடு திரும்பியுள்ளனர். இதனால் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 3,12,60,050 ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. முழுமையாக கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசிகள் மட்டுமே நமக்கு உதவி செய்யும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். எனவே இந்த ஆண்டு இறுதிக்குள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தி முடிப்பதை மத்திய அரசு நோக்கமாக கொண்டு செயல்பட்டு வருகிறது.