நிலையற்ற சூழலிலும் இந்தியா 7.8% வளர்ச்சி – பிரதமர் மோடி பெருமிதம்!
உலகம் முழுவதும் போர்கள், பொருளாதார நெருக்கடிகள் மற்றும் நிலையற்ற சூழல் நிலவி வரும் நிலையில், இந்தியா 7.8% GDP வளர்ச்சியை பதிவு செய்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் முதல் ஜூன் 2026 வரையிலான முதல் காலாண்டில் இந்த 7.8% வளர்ச்சி எட்டப்பட்டுள்ளது. மக்களின் கூட்டு முயற்சியும் உறுதியுமே இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணம் என பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
சவால்களுக்கு மத்தியிலும் வளர்ச்சி
உலகளவில் மோதல்கள் மற்றும் போர்கள் காரணமாக விநியோகச் சங்கிலிகள் பாதிக்கப்பட்டுள்ளன. 2020-ம் ஆண்டு கொரோனா காலத்திற்குப் பிறகு உலகில் நிலையான சூழல் இல்லாத போதிலும், இந்தியா தொடர்ந்து முன்னேறி வருவதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.
சுயசார்பு இந்தியாவுக்கு அழைப்பு
இந்த வளர்ச்சி வேகத்தை தொடர்ந்து தக்கவைக்க சுயசார்பு மற்றும் சுதேசி பொருட்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், தேவையில்லாத வெளிநாட்டு சுற்றுலா, வெளிநாடுகளில் திருமணம் நடத்துவது போன்றவற்றை தவிர்த்து, உள்நாட்டு பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்தியாவின் வளர்ச்சி வேகத்தை தொடர்ந்து நிலைநிறுத்தி, இளைஞர்களின் கனவுகளை நிறைவேற்றுவதற்கான முயற்சிகள் தொடர வேண்டும் என பிரதமர் தெரிவித்துள்ளார்.



























