75வது சுதந்திர தினம் – கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் முக ஸ்டாலின், ஓய்வூதியம் அதிகரிப்பு!
ஆகஸ்ட் 15 ஆம் தேதியான இன்று சுதந்திரத்தினத்தை முன்னிட்டு தமிழக முதல்வர் முக ஸ்டாலின் கோட்டையில் கொடியேற்றிய பிற்பாடு, சுதந்திர போராட்டக்காரர்களுக்கான ஓய்வூதியத்தை 18 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி அறிவித்துள்ளார்.
முதல்வர் அறிவிப்பு
இந்தியா சுதந்திரமடைந்து 75 ஆவது ஆண்டு கடந்துள்ள நிலையில் நாடு முழுவதும் சுதந்திர தினவிழா இன்று (ஆகஸ்ட் 15) கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் வழக்கம் போல தமிழகத்திலும் சுதந்திர தினவிழாவை முன்னிட்டு சென்னை ஜார்ஜ் கோட்டையில் விழா ஏற்பாடு செய்யப்பட்டது. இதையடுத்து தமிழகத்தில் தற்போது ஆட்சியமைத்துள்ளதான முதல்வர் முக ஸ்டாலின், முதன் முதலாக கோட்டையில் கொடியேற்ற இருந்தார்.
கண்ணன், ஐஸ்வர்யாவிற்கு உதவும் கதிர், கோபத்தில் மூர்த்தி – ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ அடுத்த எபிசோட்!
அந்த வகையில் கோட்டைக்கு வந்த முதல்வருக்கு, தலைமை செயலகம் துவங்கி காவல்துறை அணிவகுப்பு அளிக்கப்பட்டது. வாகனத்தில் நின்றுகொண்டே கோட்டை வந்த முதல்வர் அங்கு தேசிய கொடியை ஏற்றி வைத்து விழாவை சிறப்பித்தார். இதை தொடர்ந்து சுதந்திர போராட்டக்காரர்களுக்கான ஓய்வூதியத் தொகையை உயர்த்துவதாக ஒரு முக்கிய அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார்.
தமிழகம் முழுவதும் மீண்டும் பள்ளிகள் திறப்பு – ஆகஸ்ட் 17ம் தேதி ஆலோசனை!
அதாவது சுதந்திர போராட்டத்தில் பங்கு பெற்ற தமிழகத்தை சார்ந்த வீரர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் ஓய்வூதியத்தை ரூ.17 ஆயிரத்தில் இருந்து ரூ.18 ஆயிரமாக உயர்த்தப்படும் என்று அறிவித்துள்ளார். இதையடுத்து மதுரை மாவட்டத்தில் அமைந்துள்ள காந்தி அருங்காட்சியகம் ரூ.6 கோடி செலவில் நவீன முறையில் புதுப்பிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.