கண்ணன், ஐஸ்வர்யாவிற்கு உதவும் கதிர், கோபத்தில் மூர்த்தி – ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ அடுத்த எபிசோட்!

0
கண்ணன், ஐஸ்வர்யாவிற்கு உதவும் கதிர், கோபத்தில் மூர்த்தி - 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' அடுத்த எபிசோட்!
கண்ணன், ஐஸ்வர்யாவிற்கு உதவும் கதிர், கோபத்தில் மூர்த்தி - 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' அடுத்த எபிசோட்!
கண்ணன், ஐஸ்வர்யாவிற்கு உதவும் கதிர், கோபத்தில் மூர்த்தி – ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ அடுத்த எபிசோட்!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் அடுத்த எபிசோடில் கண்ணன், ஐஸ்வர்யாவிற்கு கதிர் தனியாக வீடு பார்த்து தங்க வைக்கிறார். இந்த விஷயத்தை தெரிந்து கொண்ட மூர்த்தி மற்றும் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைகின்றனர்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது. அதிலும் விஜய் டிவி, சன் டிவி ஆகிய சேனல்களில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு ரசிகர்கள் அதிகம். அந்த வகையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் கடந்த வாரம் பாரதி கண்ணம்மாவை பின்னுக்கு தள்ளி TRP இல் முதலிடம் பிடித்தது. இதற்கு காரணம் பரபரப்பாக நடந்த கண்ணன், ஐஸ்வர்யா திருமணம் தான். இனி பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்திற்கும், கண்ணனிற்கும் எந்த சம்மந்தமும் இல்லை என மூர்த்தி திட்டி அனுப்பி விடுகிறார். இதனால் கண்ணன், ஐஸ்வர்யா இருவரும் நண்பர் வீட்டில் தங்குகின்றனர்.

லட்சுமியின் அம்மா கண்ணம்மா தான், உண்மையை அறிந்த அதிர்ச்சியில் பாரதி – சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!

ஆனால் நண்பரின் அம்மாவோ இருவரையும் வெளியே அனுப்புகிறார். இதனால் எங்கே செல்வது என்று தெரியாமல் இருவரும் கவலையுடன் உள்ளனர். ஊரில் இருக்கும் தனது பாட்டி வீட்டிற்கு செல்லலாம் என ஐஸ்வர்யா சொல்ல, வேறு வழி தெரியாமல் கண்ணனும் ஒத்துக்கொள்கிறார். இருவரும் வீட்டு சாவியை வாங்க செல்கின்றனர். ஆனால் கஸ்தூரி அந்த வீட்டில் ஒரு செங்கல் கூட உனக்கு கிடைக்காது என கூறி விடுகிறார். மேலும் கண்ணனை அடிக்க பாயும் பிரசாந்தையும் கதிர் தடுக்கிறார். மூர்த்தி மற்றும் குடும்பத்தினர் தன்னை திட்டம் போட்டு பழிவாங்கி விட்டதாக மல்லி கோபமாக கூறுகிறார்.

பாக்கியலட்சுமி ஜெனியின் வாழ்க்கை பயணம் – சீரியல் நடிகையாக மாறிய கதை!

அடுத்த எபிசோடுகளில் தங்க வேறு எங்கு செல்வது என தெரியாமல் கண்ணன், ஐஸ்வர்யா இருவரும் உள்ளனர். கதிர் தனக்கு தெரிந்த நண்பர் வீட்டில் இருவரையும் தங்க வைக்க ஏற்பாடு செய்கிறார். இந்த விஷயம் ஜீவாவிற்கும் தெரிய வருகிறது. இருவரும் வீட்டிற்கு தெரியாமல் கண்ணன், ஐஸ்வர்யாவிற்கு உதவி செய்கின்றனர். இதனால் கோபமடைந்த கஸ்தூரி மற்றும் மல்லி மீண்டும் மூர்த்தி வீட்டிற்கு சென்று சண்டையிடுகின்றனர். கண்ணனுக்கு கதிர், ஜீவா உதவி செய்த விஷயம் தெரிந்து மூர்த்தி மற்றும் அவரது அம்மா கோபத்தில் உள்ளனர். இத்துடன் அடுத்த எபிசோட் முடிவடைகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!