தமிழக ரேஷன் கடை ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு – அரசுக்கு கோரிக்கை!

0
தமிழக ரேஷன் கடை ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு - அரசுக்கு கோரிக்கை!
தமிழக ரேஷன் கடை ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு - அரசுக்கு கோரிக்கை!

தமிழக ரேஷன் கடை ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு – அரசுக்கு கோரிக்கை!

தமிழகத்தில், நியாய விலைக் கடைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை உடனடியாக விரைந்து வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர்கள் சங்க மாநில தலைவர் ஜி.ராஜேந்திரன், பொதுச் செயலாளர் தினேஷ்குமார் ஆகியோர் கூட்டுறவு சங்கங்களின் மாநில பதிவாளருக்கு மனு அனுப்பியுள்ளனர்.

அகவிலைப்படி உயர்வு:

தமிழகத்தில் பொது விநியோகத் திட்ட கூட்டுறவு நியாயவிலைக்கடை பணியாளர்களுக்கு தங்கள் அலுவலக கடிதம் ந.க. எண் 26308/ 2020பொ.வி.தி.மு.2, நாள் 27.01.2022-ன்படி தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு 01.01.2022 முதல் அகவிலைப்படியினை உயர்த்தி வழங்க அரசாணை (நிலை) எண் 3, நிதித்துறை (படிகள்) நாள் 01.01.2022-ன் படி ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் அத்தியாவசியப் பொருட்களான அரிசி, கோதுமை, சர்க்கரை மற்றும் சிறப்பு பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் பொருட்களான துவரம் பருப்பு, பாமாயில் ஆகியவற்றை உரிய நேரத்தில் உரியவர்களுக்கு உரியவற்றை உரித்தாக்குகின்ற உன்னதமான பணியினை மேற்கொண்டு வருபவர்கள் நியாய விலைக் கடைகளில் பணிபுரியும் ஊழியர்கள், கட்டுநர்களுக்கும் 01.01.2022 முதல் அகவிலைப்படி உயர்வு வழங்கப்படுவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்பதை பதிவாளர் அலுவலக சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

TN TET ஆசிரியர் தகுதி தேர்வுக்கு கால அவகாசம் நீட்டிப்பு? வலுக்கும் கோரிக்கை!

இது குறித்து ஏப்ரல் 8ம் தேதி அன்று ஈரோடு மண்டல இணைப் பதிவாளர் அலுவலகம் முன்பாக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தி உள்ளதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. இந்நிலையில் 08.04.2022 அன்று சட்டப்பேரவையில் கூட்டுறவுத் துறை பணியாளர்களுக்கு அகவிலைப்படி குறித்தான எந்தவொரு அறிவிப்போ, சுற்றறிக்கையோ தெரிவிக்கப்படவில்லை. எனவே வரும் 13.05.2022 தேதி முதல் மாநிலப் பதிவாளர் அலுவலகம் முன்பு அகவிலைப்படி கோரி, தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர்கள் சங்கம் மீண்டும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளர் சங்கத்தின் மாநில தலைவர் ராஜேந்திரன் மற்றும் பொதுச்செயலாளர் தினேஷ்குமார், இது குறித்து மனுவில் கூறியுள்ளனர். இவ்வாறு தமிழக அரசின் அரசாணையை நிறைவேற்றுவதில் கூட்டுறவு சங்கங்களின் மாநில பதிவாளர் தொடர்ந்து அமைதி காத்து வருவதால் ரேஷன் ஊழியர்கள் பதற்றத்திலும், பரிதவிப்பிலும் உள்ளனர். எனவே இனியும் காலதாமதம் செய்யாமல் விரைவில் உயர்த்தப்பட்ட அகவிலைப்படியை வழங்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!