தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி (DA) உயர்வு – விரைவில் வெளியாகும் அறிவிப்பு?
தமிழக அரசு ஊழியர்களுக்கு தற்போது அகவிலைப்படி 31% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் ரேஷன் கடை ஊழியர்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அகவிலைப்படியை வழங்க கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அகவிலைப்படி உயர்வு:
தமிழகத்தில் கடந்த 2021 ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் போது திமுக தலைவர் முக ஸ்டாலின் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று வாக்குறுதிகளை அளித்தார். அதில் அரசு ஊழியர்களையும் கருத்தில் கொண்டு அகவிலைப்படி உயர்வு, மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என்று கூறப்பட்டது. இதனையடுத்து ஆட்சிக்கு வந்தவுடன் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அகவிலைப்படி உயர்வு வேண்டி கோரிக்கை விடுத்து வந்தனர். இதனை தொடர்ந்து அகவிலைப்படி 2022ம் ஆண்டு முதல் உயர்த்தப்படும் என்று மானிய கோரிக்கை விவாதத்தின் போது தெரிவித்தார்.
Exams Daily Mobile App Download
அதன்படி கடந்த ஜனவரி மாதம் அகவிலைப்படி 17 சதவீதத்தில் இருந்து 31% ஆக உயர்த்தப்பட்டது. இதனால் ஏராளமான அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் பயன் பெற்றனர். ஆனால் ரேஷன் கடை ஊழியர்களுக்கு மட்டும் அகவிலைப்படி உயர்த்தப்படவில்லை. ரேஷன் கடை ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வை நிறுத்தி வைக்குமாறு மண்டல இணை பதிவாளர்களுக்கு கூட்டுறவுத்துறை உத்தரவிட்டது. இந்த நிலையில் ரேஷன் கடை ஊழியர்கள் அகவிலைப்படி வேண்டி தொடர்ந்து அரசிடம் கோரிக்கை விடுத்து வந்தனர்.
மத்திய அரசு ஊழியர்களுக்கான ஹாப்பி நியூஸ் – மீண்டும் அகவிலைப்படி 4% உயர வாய்ப்பு!
கொரோனா நெருக்கடி காலத்திலும் மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை கொண்டு சேர்ப்பதில் ரேஷன் கடை ஊழியர்கள் முக்கிய பங்கு வகித்தனர். ஊரடங்கு காலத்திலும் அயராது உழைத்தனர். இதனை கருத்தில் கொண்டு விரைந்து அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர். எனவே நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அகவிலைப்படி உயர்வு உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு நியாயவிலை கடை பணியாளர் சங்கம் சார்பில் சென்னையில் தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.