பார்வதியை காணாமல் தேடி அலையும் குடும்பத்தினர், ஓடி போனதாக சொன்ன அர்ச்சனா – “ராஜா ராணி 2” சீரியலில் அடுத்த வருபவை!
விஜய் டிவி “ராஜா ராணி 2” சீரியலில் பார்வதியை செல்வம் கடத்தி வைக்க குடும்பத்தில் அனைவரும் தேடி அலைகின்றனர். இந்நிலையில் பார்வதி ஓடி போய்விட்டாள் என அர்ச்சனா பாஸ்கரின் அம்மாவிற்கு போன் செய்து சொல்ல இருக்கிறார். இதெல்லாம் இனி வரும் எபிசோடுகளில் வர இருக்கிறது.
ராஜா ராணி 2:
சின்னத்திரையில் ராஜா ராணி 2 டாப் சீரியல்களில் ஒன்றாக இருக்கிறது. இந்த சீரியலில் பல தடைகளை தாண்டி பார்வதி பாஸ்கர் திருமணம் நடந்து முடிந்துள்ளது. அதனால் குடும்பத்தில் அனைவரும் சந்தோசத்திற்கு பஞ்சம் இல்லாமல் இருக்கின்றனர். இந்நிலையில் விக்கி ஜெயிலில் இருப்பதால் அவருடைய அப்பா பயங்கர கோவத்தில் இருக்கிறார். அதனால் செல்வத்தின் உதவியுடன் பார்வதியை கடத்துகிறார். எனவே குடும்பத்தில் அனைவர் மத்தியிலும் செல்வம் நல்ல பெயர் வாங்கி இருக்கிறார்.
Exams Daily Mobile App Download
அதனால் யாருக்கும் சந்தேகம் வராமல் இருக்கிறது. பார்வதியை காணாமல் குடும்பத்தில் அனைவரும் பதட்டத்தில் இருக்கின்றனர். பல இடங்களில் சரவணனும், பாஸ்கரும் பல இடங்களில் தேடி அலைகின்றனர். ஆனால் பார்வதி கிடைக்கவில்லை. சரவணன் செல்வம் மீது சந்தேகப்பட்டு கடைக்கு வந்து கேட்க ஆனால் செல்வம் நான் பார்க்கவில்லை. இப்போது தான் பாஸ்கர் தேடி வந்தார் என சொல்கிறார். அதனால் சரவணன் செல்வதை விட்டு விட்டு பார்வதியை தேடி அலைகிறார்.
ஆனால் எங்கே தேடியும் பார்வதி கிடைக்கவில்லை. அதனால் அனைவரும் என்ன ஆனது என தெரியாமல் குழப்பத்தில் இருக்கின்றனர். சரவணன் ஒரு பக்கம், பாஸ்கர் ஒரு பக்கம் செந்தில் ஒரு பக்கம் பார்வதியை தேடி அலைகின்றனர். பின் அர்ச்சனா பார்வதியை காணாமல் இருப்பதால் சந்தோசமாக இருக்கிறார். அப்போது பாஸ்கர் அம்மாவிற்கு போன் செய்து பார்வதி யாருடையோ ஓடி போய்விட்டதாக சொல்கிறார். அதை கேட்டு அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.