பிறந்தநாளுக்கு வந்த ராதிகா, கோபியை மாட்டிவிட திட்டமிடும் தாத்தா – “மகா சங்கமம்” சீரியலில் அடுத்து வருபவை!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” மற்றும் “பாண்டியன் ஸ்டோர்ஸ்” மகா சங்கமம் சீரியலில், கோபி பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்ள ராதிகாவும் மயூராவுடன் வருகிறார். அப்போது கோபி ரூமில் அமர்ந்து கொண்டு வரமாட்டேன் என சொல்ல அது குறித்த ப்ரோமோ ஒன்று வெளியாகி இருக்கிறது.
மகா சங்கமம்:
விஜய் டிவி சீரியலில் ராமமூர்த்தி தாத்தாவின் பிறந்தநாளை கொண்டாட பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர் சென்னைக்கு வந்திருக்கின்றனர். அனைவரும் குடும்பமாக சந்தோசமாக இருக்க கோபிக்கு அவர்கள் வந்தது பிடிக்காமல் இருக்கிறது. இந்நிலையில் தாத்தாவின் பிறந்தநாள் விழா ஏற்பாடுகள் நல்லபடியாக நடக்கிறது. கலர் பேப்பர்களை வாங்கி அனைவரும் அலங்காரம் செய்ய அப்போது கோபிக்கு தெரியாமல் பாக்கியா ராதிகாவை அழைத்து விடுகிறார்.
Exams Daily Mobile App Download
அதனால் ராதிகா கோபியிடம் நீங்க கண்டிப்பாக டீச்சர் வீட்டிற்கு வர வேண்டும் என ராதிகா சொல்கிறார். கோபி முடியாது என சொல்ல ஆனால் கோபி கோபப்படுகிறார். இந்நிலையில் ராதிகாவிடம் நெஞ்சு வலி என சொல்லி கோபி வராமல் தப்பித்தலும் பிறந்தநாளில் கோபியால் தப்பிக்க முடியவில்லை. அதனால் அவர் பிறந்தநாள் நிகழ்ச்சியில் இருக்க அந்த நேரம் ராதிகா வருகிறார். ராதிகாவை பார்த்த கோபி என்ன செய்வது என தெரியாமல் செழியனை அழைத்து கொண்டு மறைந்து கொண்டே மாடிக்கு செல்கிறார்.
அங்கே கதவை அடைத்துக் கொண்டு உள்ளே இருக்கிறார். அப்போது ராமமூர்த்தி ராதிகாவிடம் எப்படியாவது உண்மை தெரிய வர வேண்டும் என நினைக்கிறார். இனியாவிடம் சொல்லி அப்பாவை வர சொல்லு என சொல்கிறார். பின் இனியா சென்று அழைக்க கோபி வரவில்லை. பின் பாக்கியாவை அனுப்பி கூட்டி வர சொல்கிறார். ஆனால் அப்போது அலுவலக வேலை இருப்பதாக சொல்லி கோபி வரவில்லை. பின் ஹாலில் மறைத்து வைக்கப்பட்டிருந்த போட்டோவில் கோபி முகம் தெரிகிறது. அதை ராதிகா பார்த்து விடுவாரா என்பது எல்லாம் இனி வரும் எபிசோடுகளில் காட்டப்பட இருக்கிறது.