மத்திய அரசு ஊழியர்களுக்கான ஹாப்பி நியூஸ் – மீண்டும் அகவிலைப்படி 4% உயர வாய்ப்பு!
மத்திய அரசு ஊழியர்களுக்கு சமீபத்தில் தான் அகவிலைப்படி சம்பள உயர்வு வழங்கப்பட்டது. தற்போது மீண்டும் அகவிலைப்படி 4% அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனால் அரசு ஊழியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
சம்பள உயர்வு:
மத்திய அரசு ஊழியர்களுக்கு அவ்வப்போது சம்பள, பதவி உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. ஆண்டுக்கு இருமுறையாவது அகவிலைப்படி சம்பள உயர்வு வழங்குவது வழக்கம். ஜனவரி மாதத்துக்கான அகவிலைப்படி மார்ச் மாதத்தில் உயரும் மற்றும் ஜுலை மாதத்தில் அகவிலைப்படி சம்பள உயர்வு கிடைக்கும். சம்பள உயர்வு காரணமாக 50 லட்சத்துக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் மற்றும் 65 லட்சத்துக்கும் மேற்பட்ட ஓய்வூதியதாரர்களும் பயன் பெற்று வருகிறார்கள். சமீபத்தில் தான் அகவிலைப்படி மூன்று சதவீதம் உயர்த்தப்பட்டு 34% ஆக இருந்தது.
Exams Daily Mobile App Download
கொரோனா கால கட்டத்தில் மட்டுமே 28 சதவீதமாக இருந்த சம்பளம் அகவிலைப்படி 3 சதவீதம் அதிகரித்து 31% ஆக இருந்தது. இதன் பின்பு 3% அதிகரிக்கப்பட்டு 34% ஆனது. தற்போது மீண்டும் 4 சதவீதம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அகவிலைப்படி 4 சதவீதம் சம்பள உயர்வு வழங்கினால் ஒரு ஆண்டிற்கு மட்டுமே DA ரூ.2 லட்சத்து 60 ஆயிரம் கிடைக்கும் என கூறப்படுகிறது. ஆகஸ்ட் மாதத்தில் தான் இது குறித்தான அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.
ஒருவரின் சம்பளம் 20000 ரூபாயாக ஆக இருப்பின் அகவிலைப்படி 4 % அதிகரித்தால் ஒரு மாதத்தில் மட்டுமே சம்பளம் 800 ரூபாய் அதிகரிக்கும். அதாவது, ஊழியர்களுக்கான சூத்திரம் கடந்த 12 மாதங்களுக்கான [(அனைத்திந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டின் (AICPI) சராசரி – 115.76/115.76]×100 என்கிற முறையின் மூலமாக தான் அகவிலைப்படி சம்பளம் கணக்கிடப்படுகிறது. இது தவிர மத்திய அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வு மற்றும் பல சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது.