தமிழகத்தில் ஆகஸ்ட் 23ம் தேதி ‘இந்த’ பகுதிகளில் மின்தடை – முக்கிய அறிவிப்பு வெளியீடு!
திருநெல்வேலி மாவட்டம் கூத்தன் குழி துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 23ம் தேதி மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று மின்வாரியம் தெரிவித்துள்ளது.
மின்தடை:
தமிழகத்தில் சீரான மின் விநியோகத்திற்காக மாதந்தோறும் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள துணை மின் நிலையங்களில் தவறாது பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதன் மூலம் பயனர்களுக்கு தடையில்லா மின் விநியோகம் வழங்கப்பட்டு வருகிறது. மின் பராமரிப்பு பணிகளின் போது மின்விநியோக பாதைகளுக்கு இடையூறாக உள்ளவைகளை கண்டறிந்து சரி செய்யப்படுகிறது. மேலும் மின் வயர்கள், கம்பிகள் போன்றவைகள் மாற்றம் செய்யப்படுகிறது.
இந்த பராமரிப்பு பணிகளின் போது மின் ஊழியர்கள் பாதுகாப்பிற்காகவும், மின் நுகர்வோர் பாதுகாப்பிற்காகவும் துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் முடிவடையும் வரை மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது. மின்தடை செய்யப்பட உள்ள பகுதிகள் குறித்து அந்தந்த பகுதி செயற்பொறியாளர்கள் மின் பயனர்களுக்கு முன்னறிவிப்பு செய்கின்றனர். இதனை அறிந்து மின் பயனர்கள் முன் கூட்டியே மின் சார்ந்த பணிகளை முடித்து விடுகின்றனர்.
TN 12th துணைத் தேர்வு முடிவுகள் 2022 – இன்று வெளியீடு !
மற்ற மாவட்டங்களை தொடர்ந்து திருநெல்வேலி மாவட்டம் கூத்தன்குழி பகுதியில் உள்ள துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 23ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் அன்றைய தினம் முருகானந்தபுரம், கூத்தன்குழி, உதயத்தூர், சிதம்பராபுரம், பரமேஸ்வரபுரம், இளைய நயினார்குளம் ஆகிய பகுதிகள் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படும் என்று மின்வாரியம் தெரிவித்துள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்