இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் மின்தடை குறைவு – அமைச்சர் பாராட்டு!

0
இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் மின்தடை குறைவு - அமைச்சர் பாராட்டு!
இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் மின்தடை குறைவு – அமைச்சர் பாராட்டு!

இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் குறைந்த அளவு மின் தடை உள்ள மாநிலம் என மத்திய எரிசக்தி துறை அமைச்சர் வி.கே.சிங் பாராட்டு தெரிவித்துள்ளார்.

பாராட்டு:

தமிழகத்தில் மே மாதத்தின் தொடக்கத்தில் வெயிலின் தாக்கம் தீவிரமாக இருந்து வந்தது. இதன் காரணமாக பொதுமக்கள் வெளியில் செல்வதை பெரும் அளவு தவிர்த்தனர். இதனால் மின்சாரத்தின் தேவையும் அதிகமாக இருந்தது. அச்சமயத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கோடை மழை பரவலாக பெய்ய தொடங்கியது. இதனால் வெப்பம் குறைந்து குளிர்ந்த சூழல் உருவாகியது. இதனால் மின்சாரத்தின் தேவை மீண்டும் படிப்படியாக குறைய தொடங்கியது.

NIMHANS நிறுவனத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு – சம்பளம்: ரூ.40,000/- || நேர்காணல் மட்டுமே!

இந்நிலையில் டெல்லியில் மின் துறை பகிர்மான நிறுவனங்களின் ஆய்வுக் கூட்டத்தில் மத்திய எரிசக்தி துறை அமைச்சர் வி.கே.சிங் பாராட்டு தெரிவித்து உள்ளார். இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் குறைந்த அளவு மின் தடை உள்ள மாநிலம் என்றும் தமிழ்நாட்டின் மின்சார நம்பகத்தன்மை, வளர்ந்த நாடுகளுடன் சமமானது என்றும் அவர் கூறியுள்ளார். தொடந்து பேசிய அவர் மற்ற மாநிலங்களை விட தமிழ்நாடு சிறப்பாக உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!