இந்தியாவில் ஒரே நாளில் 29,616 பேருக்கு கொரோனா தொற்று – 290 பேர் உயிரிழப்பு!
கொரோனா முதல் மற்றும் இரண்டாம் அலையை தொடர்ந்து தற்போது மீதும் கொரோனா தாக்கம் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் கொரோனா தாக்கம் குறித்த விவரங்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
கொரோனா நிலவரம்:
நாடு முழுவதும் கொரோனா தீவிரமாக பரவி வந்த நிலையில் மக்கள் அதிகமாக பாதிக்கப்பட்டனர். பல்வேறு கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டதை தொடர்ந்து ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து கொரோனா முதல் மற்றும் இரண்டாம் அலை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. அதனை தொடர்ந்து ஊரடங்கில் தளர்வுகள் வழங்கப்பட்டது. மூன்றாம் அலை பரவும் என எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில் தடுப்பூசி செலுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.
தமிழக தனியார் பள்ளிகள் கல்வி கட்டண நிர்ணயம் – செப்.30 கடைசி நாள்!
தற்போது மீண்டும் நாடு முழுவதும் கொரோனா தொற்று படிப்படியாக அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இதில் புதிதாக 29,616 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,36,24,419 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.16 உயர்வு – இன்றைய நிலவரம்!
மேலும் 290 பேர் உயிரிழந்து உள்ள நிலையில் நாட்டின் மொத்த பலி எண்ணிக்கை 4,46,658 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 28,046 பேர் குணமடைந்துள்ள நிலையில் மொத்த டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 3,28,76,319 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 30,1442 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுவரை இந்தியாவில் 84,89,29,160 செலுத்தப்பட்டுள்ள நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 71,04,051 பேர் தடுப்பூசி செலுத்திக்கொண்டது குறிப்பிடத்தக்கது.